மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு… உலகச் செய்திகள்

மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு; இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தற்கொலை; விசாரணைக்கு சீக்கிய எம்.பி கோரிக்கை… உலகச் செய்திகள்

மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு; இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தற்கொலை; விசாரணைக்கு சீக்கிய எம்.பி கோரிக்கை… உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு… உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

மியான்மர் தொடர்பான ஐ.நா தீர்மானம் – இந்தியா வாக்களிக்க மறுப்பு

மியான்மரில் வன்முறையை உடனடியாக நிறுத்தக் கோரும் மற்றும் அரச ஆலோசகர் ஆங் சான் சூகி உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்க இராணுவ ஆட்சிக்குழுவை வலியுறுத்தும் வரைவுத் தீர்மானத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்கவில்லை.

Advertisment

இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானை மற்றவர்கள் பயன்படுத்திய நாட்கள் முடிந்துவிட்டன; ஐ.நா.,வில் இந்தியா… உலகச் செய்திகள்

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா இந்த மாதம் தலைமை பொறுப்பை வகிக்கும் நிலையில், 12 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை மற்றும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை வாக்களிக்கவில்லை.

74 ஆண்டுகளில் மியான்மர் மீது நிறைவேற்றப்பட்ட முதல் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இதுவாகும். 1948 ஆம் ஆண்டு மியான்மர் மீதான ஒரேயொரு UNSC தீர்மானம், முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட நாடு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, கவுன்சில் பொதுச் சபைக்கு "பர்மா ஒன்றியம்" ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; உலக சுகாதார நிறுவனம் கவலை

Advertisment
Advertisements

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “பூஜ்ஜிய கோவிட்” கொள்கையை நாடு பெருமளவில் கைவிட்ட பிறகு, சீனா முழுவதும் கடுமையான கொரோனா வைரஸ் நோயின் அதிகரிப்பு குறித்து நிறுவனம் “மிகவும் அக்கறை” கொண்டுள்ளது, அதன் பின்தங்கிய தடுப்பூசி விகிதம் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.

publive-image

புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீனாவில் கோவிட் -19 தீவிரம் குறித்து, குறிப்பாக மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கைகள் குறித்து, “நிலைமை பற்றிய விரிவான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக, ஐ.நா. ஏஜென்சிக்கு கூடுதல் தகவல்கள் தேவை” என்றார்.

உலகளாவிய உச்சத்தில் இருந்து கோவிட் இறப்புகள் 90% க்கும் அதிகமாக குறைந்திருந்தாலும், தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று முடிவு செய்ய வைரஸைப் பற்றி இன்னும் பல நிச்சயமற்ற நிலைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தற்கொலை; விசாரணைக்கு சீக்கிய எம்.பி கோரிக்கை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூனியர் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, பர்மிங்காமில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் தேசிய சுகாதார சேவை (NHS) மருத்துவமனை அறக்கட்டளை மீது சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம்.பி, இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

publive-image

மருத்துவமனை அறக்கட்டளையை அடிப்படையாகக் கொண்ட பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனின் நாடாளுமன்ற உறுப்பினரான ப்ரீத் கவுர் கில், புதன்கிழமையன்று இங்கிலாந்து சுகாதாரச் செயலர் ஸ்டீவ் பார்க்லேவுக்கு தனது கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார். பர்மிங்ஹாம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்த 35 வயதான டாக்டர் வைஷ்ணவி குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 13 கீரை அடிப்படையிலான உணவுப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டன

ஆஸ்திரேலியாவில் 13 கீரை அடிப்படையிலான உணவுப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டன, 160 க்கும் மேற்பட்டோர் மாயத்தோற்றம், மயக்கம் மற்றும் பிற மனதை மாற்றும் எதிர்வினைகளைப் புகாரளித்தனர்.

publive-image

தலைச்சுற்றல் அல்லது நிற்க முடியாமல் இருப்பது, மங்கலான பார்வை மற்றும் கீரையை உட்கொண்ட பிறகு சாதாரணமாக சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற நிலைமைகளை மக்கள் தெரிவித்துள்ளனர் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. "அவர்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை, அவர்கள் குழப்பமடைந்துள்ளனர், அவர்களுக்கு மாயத்தோற்றம் உள்ளது. நாங்கள் பயங்கரமான மாயத்தோற்றங்களைப் பற்றி பேசுகிறோம்; இது வேடிக்கையாக ஒன்றும் இல்லை, ”என்று NSW பாய்சன்ஸ் தகவல் மையத்தின் மருத்துவ இயக்குனர் டேரன் ராபர்ட்ஸ் திங்களன்று உள்ளூர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கூறினார், என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China India World News Unsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: