இனவெறி தாக்குதல்; இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்... உலகச் செய்திகள்

இனவெறி தாக்குதலுக்கு, இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்; இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி; தரைவழி போக்குவரத்துக்கு பாகிஸ்தான் அனுமதி... இன்றைய உலகச் செய்திகள்

இனவெறி தாக்குதலுக்கு, இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்; இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி; தரைவழி போக்குவரத்துக்கு பாகிஸ்தான் அனுமதி... இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
இனவெறி தாக்குதல்; இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்... உலகச் செய்திகள்

Indian Americans condemns racist attack today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

இனவெறி தாக்குதலுக்கு, இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்

டெக்சாஸில் நான்கு இந்திய அமெரிக்கர்கள் குழுவிற்கு எதிரான வெறுப்புக் குற்றத்திற்கு இந்திய அமெரிக்க அமைப்புகள் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தன.

டெக்சாஸில் உள்ள பிளானோவைச் சேர்ந்த எஸ்மரால்டா அப்டன் புதன்கிழமை வாகன நிறுத்துமிடத்தில் நான்கு தெற்காசியப் பெண்களை இனரீதியாக உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

Advertisment
Advertisements

இந்தியாஸ்போராவைச் சேர்ந்த சஞ்சீவ் ஜோஷிபுரா கூறுகையில், "பிளானோவில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் துன்புறுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, இந்திய அமெரிக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.

மேலும், "வைரலான வீடியோ நான்கு பெண்கள் அவர்களின் அமைதியான இரவு உணவு சந்திப்பைத் தொடர்ந்து புறநகர் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு அவமானத்தை எதிர்கொள்வதை காட்டுகிறது. இந்தியாஸ்போராவில் உள்ள நாங்கள் இந்த இனவெறி தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் அதன் அனைத்து வடிவங்களிலும் பாகுபாடு மற்றும் தப்பெண்ணத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்," என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மோசமான ஆசிய-விரோத வெறுப்புக் குற்றங்களின் வரிசையில் இன்னுமொரு தாக்குதல் இது என்றும், காங்கிரஸில் முதல் இந்திய-அமெரிக்க பெண் பிரமிளா ஜெயா சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவத்தின் பின்னணியில் வருவதாகவும் இந்திய அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி; தரைவழி போக்குவரத்துக்கு பாகிஸ்தான் அனுமதி

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக மீதமுள்ள 15,000 மெட்ரிக் டன் கோதுமையை கொண்டு செல்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இந்தியா விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

publive-image

இந்தியாவில் இருந்து 2,500 டன் கோதுமைக்கான மனிதாபிமான உதவியின் முதல் சரக்கு பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தை அடைந்தது. இரண்டாவது கான்வாய் 2,000 மெட்ரிக் டன் கோதுமைகளை ஏற்றிக்கொண்டு மார்ச் 3 அன்று அமிர்தசரஸில் உள்ள அட்டாரியில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்திற்கு புறப்பட்டது. இந்தியா மார்ச் 8 அன்று அட்டாரி-வாகா எல்லை வழியாக 40 டிரக்குகளில் 2,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

ஜூன் மாதம் இந்தியா 3,000 மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் தரைவழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America World News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: