Advertisment

இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா போர்: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 274 பேர் பலி; 1000 பேர் காயம் - லெபனான் தகவல்

இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போரில், இஸ்ரேல் அதன் வடக்கு எல்லையில் கவனம் செலுத்துவதால், கிட்டத்தட்ட ஒரு வருட மோதலில் எல்லை தாண்டிய கடுமையான துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன.

author-image
WebDesk
New Update
pager attack

ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேலிய படைகள், இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள மர்ஜயோனில் இருந்து படம்பிடிக்கப்பட்டது. (Reuters)

நூற்றுக்கணக்கான ஹெஸ்பொல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது மிகப் பரவலான வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு, 274 பேரைக் கொன்றது, லெபனான் உயர்பகுதிகளில் சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். மேலும், ஆயுதக் குழு ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாகக் கூறிய பகுதிகளை காலி செய்யுமாறு குடிமக்களை இஸ்ரேல் எச்சரித்தது என்று ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஏறக்குறைய ஒரு வருட மோதலில் எல்லை தாண்டிய கடுமையான துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன, இஸ்ரேல் அதன் வடக்கு எல்லைக்கு கவனம் செலுத்துகிறது, அங்கே காசாவில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் அதன் நட்பு நாடான ஹமாஸுக்கு ஆதரவாக ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி வருகிறது.

லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதல் சில ஹெஸ்பொல்லா தலைவர்களின் உயிரைக் கொன்ற பிறகு, இஸ்ரேலிய ராணுவம் கடந்த வாரம் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மிக சமீபத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் மூத்த தலைவரான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டடார். பதிலடியாக ஹெஸ்பொல்லா வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது. சில வடக்கு நகரமான ஹைஃபா அருகே தரையிறங்கியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காசா மீதான போருக்கு இணையாக ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ஹெஸ்பொல்லாவுடனான அதன் மோதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் ஒரே நேரத்தில் நடத்திய புவியியல் ரீதியாக பரவலான குண்டுவீச்சு தாக்குதல்கள் ஆகும்.

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூர் அப்பாஸை சந்தித்து, காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து தனது கவலைகளை தெரிவித்தார். 12 மாதங்களுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இருப்பதை தாமதமின்றி இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரும் தீர்மானத்தில் இந்தியா ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்கவில்லை.

Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment