இஸ்ரேல் - ஈரான் மோதல்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்

மத்திய டெல் அவிவ்வில், ஏவுகணை தாக்குதலில் ஒரு உயரமான கட்டடம் சேதமடைந்தது. அந்தக் கட்டடத்தின் கீழ்ப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் நகர்ப்புற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது.

மத்திய டெல் அவிவ்வில், ஏவுகணை தாக்குதலில் ஒரு உயரமான கட்டடம் சேதமடைந்தது. அந்தக் கட்டடத்தின் கீழ்ப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் நகர்ப்புற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது.

author-image
WebDesk
New Update
Israel Iran tension

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில், 78 பேர் உயிரிழந்ததாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் தெரிவித்துள்ளார்.

Advertisment

 

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

 

Advertisment
Advertisements

நேற்று (ஜூன் 13) இரவு முழுவதும் டெல் அவிவ் மீது ஈரானிய ஏவுகணைகள் கடும் தாக்குதலை  நடத்தின. இதில் டெல் அவிவ்வில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இன்று (ஜூன் 14), இஸ்ரேல் மீது மற்றொரு சுற்று ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இந்த தாக்குதலில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில் 19 பேர் காயமடைந்தனர். ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தொலைக்காட்சி உரையைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் தொடங்கின. அவர் தனது உரையில், "இஸ்லாமிய குடியரசின் ஆயுத படைகள் இந்த தீய எதிரிக்கு பெரும் அடியை கொடுக்கும்" என்று எச்சரித்திருந்தார்.

ஈரானிய தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடந்ததாக அரசுக்கு சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபார்ஸ் செய்தி நிறுவனம், விமானப்படை தளம் மற்றும் போக்குவரத்து விமானங்களை கொண்ட மெஹ்ராபாத் விமான நிலையத்தில், இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகக் குறிப்பிட்டது.

மத்திய டெல் அவிவ்வில், ஏவுகணை தாக்குதலில் ஒரு உயரமான கட்டடம் சேதமடைந்தது. அந்தக் கட்டடத்தின் கீழ்ப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் நகர்ப்புற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது. அருகிலுள்ள ரமத் கானில் ஒரு அடுக்குமாடி கட்டடம் முற்றிலும் அழிக்கப்பட்டது. டெல் அவிவ்வின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள உயரமான குடியிருப்பு கட்டடத்தையும் ஒரு ஏவுகணை தாக்கியது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். "இன்னும் நிறைய வர உள்ளது" என்று கூறிய அவர், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்கான இஸ்ரேலின் முயற்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அணுசக்தி தளங்களின் விவரம்:

டெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள ஃபோர்டோ, நடன்ஸை விட சிறியதாக இருந்தாலும் அதிக பாதுகாப்பானது. ஒரு மலைக்கு அடியில் ஆழமாக கட்டப்பட்டு, வான் பாதுகாப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்படும் இந்த வசதி, நீண்ட காலமாக நடன்ஸுக்கு ஒரு துணை அணுசக்தி மையமாக பார்க்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு ஃபோர்டோ கட்டுமானம் தொடங்கியது. இருப்பினும், மேற்கு உளவு முகமைகள் இந்த திட்டத்தை IAEA-க்கு வெளிப்படுத்திய பிறகுதான், 2009 இல் ஈரான் அதன் இருப்பை ஒப்புக்கொண்டது.

டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 465 மைல் தொலைவில் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள புஷேர், ஈரானின் ஒரே செயல்பாட்டில் உள்ள வணிக அணுமின் நிலையமாகும். அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா ஆட்சியின் கீழ் 1970 களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு நிறுத்தப்பட்டது. பின்னர் ரஷ்யாவால் நிறைவு செய்யப்பட்டது.

புஷேர், ரஷ்யாவில் இருந்து வழங்கப்படும் யுரேனியத்தால் இயங்குகிறது மற்றும் IAEA கண்காணிப்பில் உள்ளது. ஈரான் இந்த தளத்தில் மேலும் இரண்டு அணு உலைகளை கட்டி வருகிறது.

டெஹ்ரானுக்கு தென்மேற்கே 155 மைல் தொலைவில் அமைந்துள்ள அராக், கனநீரை குளிரூட்டியாகப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை புளூட்டோனியத்தை ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்ய முடியும். ஈரான், புளூட்டோனியம் அடிப்படையிலான ஆயுதங்களை உருவாக்குவதை இதுவரை தொடரவில்லை என்றாலும், அராக் கோட்பாட்டளவில் அணு குண்டுக்கு இரண்டாவது வழியை வழங்குகிறது.

உலக வல்லரசுகளுடன் 2015 இல் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அராக் திட்டத்தை மீண்டும் வடிவமைக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இது அணு ஆயுத பரவல் அபாயங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

Iran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: