/indian-express-tamil/media/media_files/pYk5xtJQIZb6dm66KMdj.jpg)
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஏற்பட்ட வன்முறையின் போது இஸ்ரேலில் ஒன்பது அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா திங்களன்று உறுதிப்படுத்தியது.
Israel-Palestine Conflict: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் சனிக்கிழமை (அக்.7) ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாலஸ்தீன தலைநகர் காஸாவில் 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க : PM Netanyahu says Hamas attack will ‘change Middle East’ after Israel declares complete siege of Gaza
இந்த நிலையில், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகளின் முன்னோடியில்லாத வகையில் பல முனை தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் "மத்திய கிழக்கை மாற்றும்" என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று கூறினார்.
சனிக்கிழமையன்று தொடங்கிய திடீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தெற்கு எல்லை நகரங்களின் மேயர்களிடம் அவர் பேசியதாக அவரது அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
9 அமெரிக்கர்கள் உயிரிழப்பு
இதற்கிடையில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஏற்பட்ட வன்முறையின் போது இஸ்ரேலில் ஒன்பது அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா திங்களன்று உறுதிப்படுத்தியது.
இது தொடர்பாக அறிக்கையில், “பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, எங்கள் இஸ்ரேலிய பங்காளிகளுடன், குறிப்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.