அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் - ஊரடங்கு அறிவிப்பு; டிரம்பின் செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கண்டனம்

கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூகாம்ப், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ராணுவ குவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூகாம்ப், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ராணுவ குவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
US LA protest

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேற்ற அதிகாரிகளின் (ICE) சோதனைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக நீடித்து வரும் நிலையில், நகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறை சம்பவங்கள் மற்றும் சுமார் 23 வணிக நிறுவனங்களில் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரன் பாஸ், டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தார்.

Advertisment

போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதனை "அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிரான தாக்குதல்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நகரில் அதிக படைகளை நிலைநிறுத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்கனவே 4,000 தேசிய காவலர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய கட்டடங்கள் மற்றும் சட்டம் அமலாக்க அதிகாரிகளை பாதுகாப்பதற்காக சுமார் 700 அமெரிக்க கடற்படையினர் (US Marines) டவுன்டவுன் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூகாம்ப், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ராணுவ குவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது ஒப்புதல் இல்லாமல் தேசிய காவலர்கள் மற்றும் அமெரிக்க கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைநிறுத்தலை உடனடியாக தடுக்க கோரி டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.

"இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், கலிபோர்னியா தொடர்ந்து போராடும்" என்று கவர்னர் நியூகாம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "நாங்கள், பாதுகாப்பு படையினரை மதிக்கிறோம். ஆனால், அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கக்கூடாது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, டிரம்ப் நிர்வாகத்தால் லாஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4,000 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியில் சுமார் 2,100 தேசிய காவலர்கள் இருந்ததாக ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், 700 கடற்படையினரை லாஸ் ஏஞ்சல்ஸ் டவுன்டவுனில் பென்டகன்  நிலைநிறுத்தியுள்ளது. இவர்கள் மத்திய கட்டடங்கள் மற்றும் சட்டம் அமலாக்க அதிகாரிகளை பாதுகாக்க நகர் பகுதிகளில் நிறுத்தப்படுவதற்கு காத்திருக்கின்றனர். உள்நாட்டில் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவிற்குள் படைகள் அணிதிரட்டப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமை, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறித்த விவாதங்களை மேலும் அதிகரித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: