Advertisment

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் - பதவி விலகிய ரணில் விக்ரமசிங்க

பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், அதிபர் தேர்தலின் முடிவைப் பொறுத்து பதவி விலக முடிவு செய்ததாக விக்ரமசிங்க கூறினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahinda Rajapaksa appointed Sri Lanka Prime minister after Ranil Wickremesinghe resigns - இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் - பதவி விலகிய ரணில் விக்ரமசிங்கே

Mahinda Rajapaksa appointed Sri Lanka Prime minister after Ranil Wickremesinghe resigns - இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் - பதவி விலகிய ரணில் விக்ரமசிங்கே

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்.ஷ புதன்கிழமை தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை நாட்டின் பிரதமராக நியமித்ததாக செய்தி நிறுவனம் ஏ.எஃப்.பி குறிப்பிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

Advertisment

ஒரு அறிக்கையில், விக்ரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதித்ததாக கொழும்பு கெசட் செய்தித்தாளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், அதிபர் தேர்தலின் முடிவைப் பொறுத்து பதவி விலக முடிவு செய்ததாக விக்ரமசிங்க கூறினார்.

இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷ, ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தலில் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிபரும் அமைச்சரவையும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் ஆட்சி மேம்படும் என்று வலியுறுத்தி விக்ரமசிங்கவின் ராஜினாமாவை மஹிந்தா இன்று கோரியிருந்தார். "எங்களுக்கு பொதுத் தேர்தல்கள் இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன். பல அமைச்சரவை உறுப்பினர்கள் ஏற்கனவே பதவி விலகியுள்ளனர். அதிபரும் அமைச்சரவையும் ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு அரசாங்கத்தை கொண்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று டெய்லி பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டு இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, 2018 ஆம் ஆண்டில் மிகச் சில காலத்திற்கு பிரதமராக பதவி வகித்தார். அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார், இது ஒரு அரசியலமைப்பு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். எவ்வாறாயினும், கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

மஹிந்தா 2005 முதல் 2015 வரை இலங்கையின் அதிபராக பணியாற்றினார். இதனால் அவர் தெற்காசியாவின் மிக நீண்ட காலம் தலைவராக இருந்தார். 1970 ஆம் ஆண்டில் தனது 24 வயதில் நாட்டின் மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினரானார்.

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment