Mike Pompeo claims India informed him Pakistan was preparing for nuclear attack post-Balakot surgical strike, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானதாக இந்தியா கூறியது – மைக் பாம்பியோ | Indian Express Tamil

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானதாக இந்தியா கூறியது – மைக் பாம்பியோ

புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானது. இந்தியாவும் தாக்குதலுக்கு தயாரானது – முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானதாக இந்தியா கூறியது – மைக் பாம்பியோ
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

PTI

2019 பிப்ரவரியில் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அடுத்து, அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வந்ததாகவும், அதேநேரம் இந்தியா அதன் சொந்த பாணியில் எதிர் தாக்குதலுக்கு தயாராகி வந்ததாகவும், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னிடம் கூறினார் என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

செவ்வாயன்று கடைகளில் வந்த தனது சமீபத்திய புத்தகமான ‘நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்’ என்ற புத்தகத்தில், பிப்ரவரி 27-28 தேதிகளில் அமெரிக்க-வடகொரியா உச்சிமாநாட்டிற்காக ஹனோயில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த நெருக்கடியைத் தவிர்க்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடன் ஒரே இரவில் எங்கள் குழு வேலை செய்தது என்று மைக் பாம்பியோ கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: ஆயிரக்கணக்கான இந்திய ஐ.டி வல்லுநர்கள் வேலை இழப்பு; அமெரிக்காவில் தங்க தீவிர முயற்சி

“பிப்ரவரி 2019 இல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அணு ஆயுத மோதலுக்கு எவ்வளவு நெருக்கமாக வந்தது என்பதை உலகம் சரியாக அறியவில்லை என்று நான் நினைக்கிறேன். உண்மை என்னவென்றால், எனக்கும் துல்லியமாக பதில் தெரியவில்லை; அது மிகவும் நெருக்கமாக இருந்தது என்று எனக்குத் தெரியும்,” என்று மைக் பாம்பியோ எழுதியுள்ளார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களைக் கொன்ற புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக 2019 பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதப் பயிற்சி முகாம் மீது இந்தியாவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

“நான் வியட்நாமின் ஹனோய் நகரில் இருந்த இரவை என்னால் மறக்கவே முடியாது, வட கொரியர்களுடன் அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது போதாது என்பது போல், காஷ்மீரின் வடக்கு எல்லைப் பகுதியில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்,” என்று மைக் பாம்பியோ கூறினார்.

“பாகிஸ்தானின் தளர்வான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகளால் ஓரளவு இயக்கப்பட்ட, நாற்பது இந்தியர்களைக் கொன்ற, காஷ்மீரில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலில் பதிலடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து நடந்த சண்டையில் பாகிஸ்தானியர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்திய விமானியை சிறைபிடித்தனர்,” என்று மைக் பாம்பியோ கூறினார்.

“ஹனோயில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சரிடம் நான் பேசினேன். பாகிஸ்தானியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக அவர் நம்பினார். இந்தியா, அதன் சொந்த தாக்குதலைப் பற்றி சிந்தித்து வருவதாக அவர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் நீங்கள் ஒன்றும் செய்யாமல், விஷயங்களைச் சரிசெய்ய எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள் என்று கேட்டேன்” என்று மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் எழுதுகிறார், மைக் பாம்பியோவின் புத்தகம் சுஷ்மா ஸ்வராஜை “அவர்” என்று தவறாகக் குறிப்பிடுகிறது.

“எங்கள் ஹோட்டலில் உள்ள சிறிய பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதியில் என்னுடன் இருந்த தூதுவர் (அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்) போல்டனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். பாகிஸ்தானின் உண்மையான தலைவரான (இராணுவத் தலைவர்) ஜெனரல் (கமர் ஜாவேத்) பஜ்வாவை நான் தொடர்புக் கொண்டேன், இதற்கு முன்னர் அவருடன் நான் பலமுறை பேசியுள்ளேன். இந்தியர்கள் என்னிடம் சொன்னதைச் சொன்னேன். அது உண்மையல்ல என்று அவர் கூறினார்,” என்று மைக் பாம்பியோ எழுதியுள்ளார்.

“எல்லோரும் எதிர்பார்ப்பது போல, இந்தியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்குத் தயார் செய்கிறார்கள் என்று அவர் நம்பினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எங்கள் குழுக்கள் சில மணிநேரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் நல்ல வேலை செய்தது, இரு தரப்பும் அணுவாயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை அவர்களுக்கு நம்ப வைப்பதற்கு எங்களுக்குச் சில மணிநேரம் ஆனது,” என்று 59 வயதான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அவருடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பாம்பியோவின் கூற்றுக்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

“ஒரு பயங்கரமான விளைவைத் தவிர்க்க அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. எல்லா இராஜதந்திரத்தையும் போலவே, சிக்கலைத் தீர்க்கும் நபர்களும் மிக முக்கியமானவர்கள், குறைந்தபட்சம் குறுகிய காலத்தில். இந்தியாவில் சிறந்த குழு உறுப்பினர்களைக் கொண்டிருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி, கென் ஜஸ்டரைப் போல, அவர் நம்பமுடியாத திறமையான தூதராக இருந்தார். கென் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறார்,” என்று மைக் பாம்பியோ கூறினார்.

“மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் அமெரிக்க மக்களை நேசிக்கிறார் மற்றும் ஒவ்வொரு நாளும் எங்களுக்காக விசுவாசமாக உழைத்தார். எனது மூத்த இராஜதந்திரியான டேவிட் ஹேல், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதராகவும் இருந்துள்ளார், மேலும் இந்தியாவுடனான நமது உறவுக்கு முன்னுரிமை என்பதை அறிந்திருந்தார்,” என்று மைக் பாம்பியோ கூறினார்.

“ஜெனரல் மெக்மாஸ்டர் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் ராணுவப் பிரிவு என மறுபெயரிடப்பட்டதன் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன், இந்தியாவின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டனர்,” என்று மைக் பாம்பியோ கூறினார்.

“இந்தியர்களால் அடிக்கடி விரக்தியடைந்தாலும், ஒரு சிறந்த வர்த்தக பேச்சுவார்த்தையாளர் மற்றும் பாப் டோல் ஊழியர்களின் முன்னாள் மாணவர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த உழைக்கும் ஒரு சிறந்த பங்காளியாக இருந்தார். இந்தியாவுடனான எங்கள் உறவுகளை இறுக்கவும், புதிய யோசனைகளுடன் அச்சை உடைக்கவும் அமெரிக்கா துணிச்சலான வியூக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டோம், ”என்று மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Mike pompeo claims india informed him pakistan was preparing for nuclear attack post balakot surgical strike