இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்திகுத்து - 6 பேர் காயம்
புதன்கிழமை காலை பாரிஸில் உள்ள Gare du Nord ரயில் நிலையத்தில் கத்தியுடன் ஒருவர் ஆறு பேரைத் தாக்கியதில் ஒருவர் பெரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: முகமது நபியின் ஓவியத்தைக் காட்டியதால் வேலையை இழந்த கல்லூரி விரிவுரையாளர்
தாக்குதலை நடத்தியவர் போலீசாரால் பலமுறை சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி அப்போது பணியில் இல்லாமல் இருந்ததாக ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. இந்த நிலையம் ஐரோப்பாவிலேயே மிகவும் பரபரப்பான ஒன்றாகவும், பாரிஸ், லண்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்குப் பகுதிகளுக்கு இடையேயான முக்கிய இணைப்பாகவும் உள்ளது.
தென்கொரியா, ஜப்பானுக்கு புதிய விசா வழங்க சீனா தடை
சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீது தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் சமீபத்தில் விதித்த கோவிட்-19 நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன தூதரகங்கள் செவ்வாயன்று அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விசா வழங்குவதை நிறுத்தியுள்ளன.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/01/Virus_Outbreak_China_Japan_41666-830c1.jpg)
கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் சோதனையை விதித்துள்ள மற்ற நாடுகளுக்கும் விசா இடைநீக்கத்தை சீனா விரிவுபடுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. டோக்கியோ மற்றும் சியோலில் உள்ள தூதரகங்கள் சுருக்கமான ஆன்லைன் அறிவிப்புகளில் இடைநீக்கங்களை அறிவித்தன.
தூதரகத்தின் WeChat சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட சியோல் அறிவிப்பு, தென் கொரியா சீனாவிற்கு எதிரான "பாரபட்சமான நுழைவு நடவடிக்கைகளை" நீக்கும் வரை தடை தொடரும் என்று கூறியது. இந்த அறிவிப்பு சுற்றுலா, வணிக மற்றும் வேறு சில விசாக்களை உள்ளடக்கியது.
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்
கிரீஸின் முன்னாள் மற்றும் கடைசி மன்னரான கான்ஸ்டன்டைன் ஏதென்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் அறிவித்தனர். அவருக்கு வயது 82.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/01/cover-.jpg)
ஏதென்ஸில் உள்ள தனியார் ஹைஜியா மருத்துவமனையின் ஊழியர்கள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்குப் பிறகு கான்ஸ்டன்டைன் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
1964 இல் அவர் தனது 23 வயதில் கான்ஸ்டன்டைன் II ஆக அரியணை ஏறியபோது, ஏற்கனவே பாய்மரப் படகு போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பெருமையை அடைந்த இளமையான மன்னர், மிகவும் பிரபலமானார். அடுத்த ஆண்டு, அவர் அந்த ஆதரவின் பெரும்பகுதியை வீணடித்துவிட்டார், அவர் சூழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி ஜார்ஜ் பாப்பாண்ட்ரூவின் மத்திய யூனியன் அரசாங்கத்தை வீழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil