கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முனதினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 3-வது நாளான நேற்றும் போப் ஆண்டவரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.
போப் பிரான்சிஸ் உடல் அடக்கம்: Pope Funeral LIVE: Funeral Mass for Pope Francis at the Vatican | Final Farewell Ceremony | Watch
பின்னர், மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது. இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pope Francis Funeral Live Updates: Pope buried inside his favourite Rome church; Prez Murmu, Trump among 250,000 to attend funeral services
பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்த இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இறுதிச் சடங்கில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பங்கேற்றதாக வாடிகன் சிட்டி தெரிவித்துள்ளது.