Advertisment

உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு சீனாவிடம் ராணுவ உபகரணங்களைக் கேட்கும் ரஷ்யா

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ரஷ்ய பொருளாதாரத்தை பாதித்துள்ள உலகளாவிய பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷ்யாவிற்கு கிடைக்கும் தண்டனையைத் தவிர்க்க உதவுவதைத் தவிர்க்குமாறு சீனாவை வெளிப்படையாக எச்சரித்தார்.

author-image
WebDesk
New Update
Russia asks military equipment from China, Ukraine invasion, russia, உக்ரைன் போர், ரஷ்யா படையெடுப்பு, சீனாவிடம் ராணுவ உபகரணங்களைக் கேட்கும் ரஷ்யா, சீனா, china, russia seeks military equipment from China, ukraine

உக்ரைன் மீதான படையெடுப்பில், ரஷ்யா, சீனாவிடம் ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு கேட்டுள்ளது என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். அமெரிக்க மற்றும் சீன அரசாங்கங்களின் உயர்மட்ட உதவியாளர்களுக்கு இடையே திங்கள்கிழமை ரோமில் நடைபெற்ற இந்த கூட்டம், நடந்துகொண்டிருக்கும் போரைப் பற்றிய பதட்டங்களை அதிகரித்துள்ளது.

Advertisment

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ரஷ்ய பொருளாதாரத்தை பாதித்துள்ள உலகளாவிய பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷ்யாவிற்கு தண்டனையைத் தவிர்க்க உதவுவதைத் தவிர்க்குமாறு சீனாவை வெளிப்படையாக எச்சரித்தார். “நாங்கள் அதை முன்னோக்கி செல்ல அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கு சீனா நிதி உதவி வழங்கும் வாய்ப்பு உள்ளது என்பது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பல கவலைகளில் ஒன்று. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க உக்ரைனுடனான அதன் தற்போதைய போரில் முன்னோக்கி அழுத்தம் கொடுப்பதற்கு, சமீபத்திய நாட்களில், இராணுவ உபகரணங்கள் உட்பட ரஷ்யா சீனாவிடம் ஆதரவைக் கோரியதாகக் கூறினார். இந்த கோரிக்கையின் நோக்கம் குறித்த விவரங்களை அதிகாரி தெரிவிக்கவில்லை. இந்தக் கோரிக்கையை முதலில் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படைகள் உக்ரைனை ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களால் தாக்குவதற்கு இது ஒரு சாக்காக இருக்கும் என்றும் ரஷ்யாவின் தவறான தகவலை சீனா பரப்புவதாகவும் பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சீனாவை அதன் இரண்டு பெரிய வர்த்தக கூட்டாளிகளுடன் ஒரு நுட்பமான இடத்தில் வைக்கிறது: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். சீனாவிற்கு அந்த சந்தைகளை அணுக வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அது மாஸ்கோவிற்கு ஆதரவைக் காட்டியுள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து எல்லையில்லா நட்பை அறிவிக்கிறது. மூத்த சீன வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யாங் ஜியேச்சியுடனான அவரது பேச்சுக்களில், மாஸ்கோவிற்கு பெய்ஜிங் என்ன செய்யப்போகிறது என்பதில் சல்லிவன் வரம்புகளைத் தேடுவார்.

“நான் இங்கே உட்கார்ந்துகொண்டு பகிரங்கமாக மிரட்டல்களை விடுக்கப் போவதில்லை” என்று அவர் சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு ஞாயிறு செய்தி நிகழ்ச்சி நேர்காணல்களில் கூறினார். “ஆனால், நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நாங்கள் பெய்ஜிங்கிற்கு நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் தொடர்பு கொள்கிறோம். அது முற்றிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். சீனா ரஷ்யாவிற்கு உதவி செய்தால்? தடைகளால் அதன் இழப்புகளை மீண்டும் நிரப்பமுடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளர்.

“நாங்கள் அதை முன்னோக்கி செல்ல அனுமதிக்க மாட்டோம். உலகில் எந்த நாட்டிலிருந்தும் இந்த பொருளாதார தடைகளிலிருந்து ரஷ்யாவிற்கு உயிர் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

இந்த பேச்சுக்கள் பற்றிய சுருக்கமாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் உக்ரைனைக் குறிப்பிடவில்லை, “கடந்த ஆண்டு நவம்பரில் சீனா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் நடத்திய கணொலி வழியான உச்சிமாநாட்டில் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய பிரச்சினை” என்று கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வெளியிடப்பட்ட கருத்துப்படி, “அவர்கள் சீனா-அமெரிக்க உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்” என்று ஜாவோ கூறினார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் நேரடி தாக்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவுடன் உக்ரைன் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்தி வருவதாக பெய்ஜிங் ரஷ்யாவின் தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாக பைடன் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரைனியர்கள் மீது உயிரியல் அல்லது ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு ரஷ்யா முன்னேறினால், சீனா திறம்பட பாதுகாப்பு அளிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மற்ற நாடுகள் உயிரியல் அல்லது ரசாயன தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டத் தொடங்கும் போது, ​​சல்லிவன் என்.பி.சி-யின் ஊடக சந்திப்பில், “அவர்கள் தாங்களாகவே அதைச் செய்யும் முனைப்பில் இருக்கலாம் என்று சொல்வது நல்லது” என்று கூறினார்.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ஏ.பி.சி-யின் ‘இந்த வாரம்’-ல், "ஒருவித உடனடி ரசாயன அல்லது உயிரியல் தாக்குதலைக் குறிக்கும் எதையும் நாங்கள் இப்போது பார்க்கவில்லை. ஆனால், நாங்கள் இதை மிக மிக உன்னிப்பாகப் பார்த்து வருகிறோம்.” என்று கூறினார்.

உக்ரைனிய ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களுக்கு அமெரிக்கா நிதியளிப்பதாக எந்த ஆதாரமும் இல்லாமல் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ரஷ்யா தவறான தகவல்கள் மற்றும் சீனா உடந்தையாக இருப்பது பற்றி அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரஷ்யாவின் கருத்தை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனும் எதிரொலித்தார். அவர் “26 உயிரியல் ஆய்வகங்கள் மற்றும் தொடர்புடைய வசதிகள் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது” என்று கூறினார். இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இது அபாண்டமானது என்று கூறினார். உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது என்று வெள்ளை மாளிகைக்குள் கவலை அதிகரித்து வருகிறது. இது பெய்ஜிங்கின் உலக ஒழுங்கு பற்றிய பார்வையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறது என்று நிர்வாக சிந்தனையை நன்கு அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக ரஷ்யர்களை விமர்சிப்பதைத் தவிர்க்கும் சில நாடுகளில் சீனாவும் ஒன்று. பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா படையெடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்தளித்தார்.

புதின் வருகையின் போது, ​​இரு தலைவர்களும் எல்லையற்ற நட்பை அறிவிக்கும் 5,000 வார்த்தைகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டனர்.

ரஷ்யாவை தணிக்கை செய்யும் ஐ.நா வாக்குகளுக்கு சீனா வாக்களிக்கவில்லை. மேலும், மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதார தடைகளை விமர்சித்துள்ளனர். சர்வதேச மோதலுக்கு மத்தியஸ்தம் செய்யும் அதன் நடுநிலைமை மற்றும் குறைவான அனுபவம் பற்றிய கேள்விகள் இருந்தபோதிலும், அமைதிப் பேச்சுக்களுக்கு அது தனது ஆதரவை வெளிப்படுத்தி மத்தியஸ்தராக தனது பணியை வழங்குகிறது.

ஆனால், பெய்ஜிங் மேற்கு நாடுகளை அந்நியப்படுத்துவதற்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துவதற்கும் எவ்வளவு தூரம் செல்லும் என்பது கேள்விகள் உள்ளன.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து வாஷிங்டன் புகார் செய்யக்கூடாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில், அமெரிக்கா ஈராக் மீது பொய்யான சாக்குப்போக்குகளின் கீழ் படையெடுத்தது. சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா கூறியது. ஆனால், இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரோமில் இருக்கும் போது இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியின் ராஜதந்திர ஆலோசகரான லூய்கி மேட்டியோலோவை சல்லிவன் சந்திக்க உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

China Ukraine Russia America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment