அதிபர் புதினை ட்ரோன்கள் மூலம் கொல்ல முயற்சி; உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி; இரண்டு ட்ரோன்கள் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி; இரண்டு ட்ரோன்கள் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
Vladimir Putin

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (ராய்ட்டர்ஸ்)

Reuters

ஜனாதிபதி விளாடிமிர் புதினைக் கொல்லும் முயற்சியில் புதன்கிழமை கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன், தனது முயற்சியில் தோல்வியுற்று உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

Advertisment

கிரெம்ளின் சிட்டாடலில் உள்ள புதினின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அவை மின்னணு பாதுகாப்புகளால் முடக்கப்பட்டதாகவும் கிரெம்ளின் கூறியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்று கிரெம்ளின் கூறியது. உக்ரைனுடனான 14 மாத கால யுத்தம் மேலும் தீவிரமடைவதை நியாயப்படுத்த ரஷ்யா இந்தச் சம்பவத்தை பயன்படுத்தக்கூடும் என்றும் கிரெம்ளின் கருத்துரைத்தது.

உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

"இரண்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கிரெம்ளினை இலக்காகக் கொண்டன. ரேடார் போர் அமைப்புகளைப் பயன்படுத்தி இராணுவம் மற்றும் சிறப்பு சேவைகள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, ட்ரோன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன,” என்று கிரெம்ளின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

"இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவும், வெற்றி தினத்தை முன்னிட்டு, வெளிநாட்டு விருந்தினர்களின் வருகையுடன் திட்டமிடப்பட்டுள்ள மே 9 அணிவகுப்புக்கு முன்னதாக ஜனாதிபதியின் உயிருக்கு எதிரான முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம்...”

"பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க ரஷ்ய தரப்புக்கு உரிமை உள்ளது, எப்போது, ​​​​எங்கு பொருத்தமாக இருக்குமோ அப்போது செய்வோம்."

கிரெம்ளின் மாளிகை பகுதியில் ட்ரோன்களின் துண்டுகள் சிதறிக்கிடக்கின்றன, ஆனால் உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் எதுவும் இல்லை என்று கிரெம்ளின் அறிக்கை கூறியது.

தாக்குதல் நடந்த நேரத்தில் புதின் கிரெம்ளினில் இல்லை என்றும், மாஸ்கோவிற்கு வெளியே உள்ள அவரது நோவோ ஓகாரியோவோ இல்லத்தில் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்ததாகவும் RIA செய்தி நிறுவனம் கூறியது.

இராணுவ செய்தி நிறுவனமான ஸ்வெஸ்டாவின் சேனல் உட்பட ரஷ்ய சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத வீடியோ, இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவர் வளாகத்தில் உள்ள பிரதான கிரெம்ளின் அரண்மனைக்கு பின்னால் வெளிறிய புகை எழுவதைக் காட்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Russia Ukraine Vladimir Putin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: