தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நள்ளிரவில் திடீரென அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ள நிலையில், தற்போது தென் கொரிய முழுவதும் ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
Read In English: South Korea Martial Law: President Yoon declares martial law amid political crisis
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று திடீரென நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை தொடர்ந்து அங்கு ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தொலைக்காட்சி மாநாட்டின் போது இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிபர், எதிர்கட்சிகள் நாட்டின் ஜனநாயக ஒழுங்கை அச்சுறுத்தும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். தற்போது இந்த அறிவிப்பு நாட்டை அரசியலை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
மேலும் தென்கொரிய அதிபரின் இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்றம், தற்போதைய ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவான நிலைபாட்டில் செயல்படுவதாகவும், இதன் காரணமாக தனது நிர்வாகத்தை முடக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகவும், அதிபர் யூன் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த அறிவிப்பின் மூலம் "வட கொரிய சார்பு சக்திகளை ஒழிப்பதாகவும், அரசியலமைப்பு ஜனநாயக ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும்" அவர் சபதம் செய்துள்ளார்.
தற்போது ராணுவ சட்டங்கள் தென்கொரியாவில் அமலுக்கு வந்திருந்தாலும், ஆட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீதான இராணுவச் சட்டத்தின் உடனடி தாக்கங்கள் தெளிவாக இல்லை. 2022 இல் பதவியேற்றதில் இருந்து யூனின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவரது பழமைவாத மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் பட்ஜெட் மசோதா உட்பட முக்கிய பிரச்சினைகளில் கடுமையான எதிர்கொண்டது.
தற்போது அதிபர் யூனின் ஒப்புதல் மதிப்பீடுகள் சரிந்து வருகின்றன, சர்ச்சைகள், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் மீதான விசாரணைகளுக்கான எதிர்ப்பின் கோரிக்கைகளால் தூண்டப்பட்டது. இதற்குப் பதிலடியாக, ஜனநாயகக் கட்சி தனது சட்ட வல்லுணர்களை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது குறித்து கட்சித் தலைவர்கள் இன்னும் முறையான அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் யூனின் நடவடிக்கைக்கு கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், இதனை நிறைவேற்று அதிகாரத்தின் மிகைப்படுத்தலாகக் கருதப்படலாம்.
யூனின் நிர்வாகம் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது, ஆனால் இந்த அறிவிப்பு தென் கொரியாவின் ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”