Maaveerar Naal : இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைழகத்தில், கடந்தவாரம் ராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, மாவீரர் நாள் போஸ்டர் வைத்திருந்ததாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்கள் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமின் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அவர்களை 16 நாட்கள் காவலிலும் வைக்க உத்தரவிட்டார்.