2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துக் கொண்டனர்.
அமைதிக்கான நோபல் பரிசு:
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கின.
இந்நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (5. 9.18) அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.
காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் முக்வேஜா :
மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஆவர். போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். மேலும், போரின் மீது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சைகளை டென்னிஸ் முகவேஜா வெற்றிக்கரமாக செய்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நாடியா முராத் :
நடியா முராத் ஈராக் நாட்டை சேர்ந்தவர். இவர் குறிப்பாக ஈராக்கில் உள்ள யாஷிதி சமுதாயத்தில் உள்ள பெண்களுக்காக பல இடங்களில் குரல் கொடுத்தவர். இவர்களுக்கு நடந்த அநீதிகளை ஐநா வரை கொண்டு சென்றார்.
இந்த பெண்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையில் நாடியா முராத் ஆற்றிய உரை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.