The United States will donate ventilators to India : இந்தியாவில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. சீனாவை காட்டிலும் அதிகமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள நண்பர்களுக்காக வெண்டிலேட்டர்களை அமெரிக்கா அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடன் துணை நிற்போம். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் கண்ணுக்கு தெரியாத கொரானா வைரஸை தோற்கடிப்பதிலும் இணைந்து செயல்படுவோம் என ட்வீட் வெளியிட்டுள்ளார்.
I am proud to announce that the United States will donate ventilators to our friends in India. We stand with India and @narendramodi during this pandemic. We’re also cooperating on vaccine development. Together we will beat the invisible enemy!
— Donald J. Trump (@realDonaldTrump) May 15, 2020
கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவும் வகையில், இந்தியா 5 கோடி ஹைட்ராக்ஸி குளோராக்குயின் மாத்திரைகளை அனுப்பி வைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளின் நட்புறவு சிறப்புற அமைய ஒரு முன்னெடுப்பாகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர். எவ்வளவு வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் வரும் என்பதை உறுதி செய்துள்ளது அந்நாடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.