பாகிஸ்தானில் இந்து அமைச்சர் வாகனம் மீது தக்காளி வீச்சு; விசாரணைக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களால், இந்து அமைச்சரின் வாகன அணிவகுப்பு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கால் தாக்கப்பட்டது; சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களால், இந்து அமைச்சரின் வாகன அணிவகுப்பு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கால் தாக்கப்பட்டது; சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

author-image
WebDesk
New Update
pak army

PTI

Advertisment

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து அமைச்சர் ஒருவர், புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் சட்டமன்ற உறுப்பினரும் மத விவகாரங்களுக்கான இணையமைச்சருமான கீல் தாஸ் கோஹிஸ்தானி சனிக்கிழமை தட்டா மாவட்டம் வழியாக வாகனம் ஓட்டிச் சென்றபோது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களால் அவரது வாகன அணிவகுப்பு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கால் தாக்கப்பட்டது.

Advertisment
Advertisements

தாக்குதலில் கீல் தாஸ் கோஹிஸ்தானி காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், அமைச்சர் கீல் தாஸ் கோஹிஸ்தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

“மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும்” என்று பிரதமர் கூறினார்.
தகவல் துறை அமைச்சர் அட்டா தரார், சம்பவம் குறித்த விவரங்களை சிந்து காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் குலாம் நபி மேமனிடமிருந்தும், மத்திய உள்துறை செயலாளரிடமிருந்தும் அறிக்கை கோரினார்.
சிந்து முதலமைச்சர் சையத் முராத் அலி ஷாவும் இந்தச் செயலை கடுமையாகக் கண்டித்தார்.

ஒரு அறிக்கையில், முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஹைதராபாத் பகுதிக்கான துணை காவல் கண்காணிப்பாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

தேசிய சட்டமன்றத்தின் வலைத்தளத்தில் உள்ள தனிப்பட்ட விவரங்களின்படி, கீல் தாஸ் கோஹிஸ்தானி சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர், மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக PML-N கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முழு ஐந்து ஆண்டு காலத்திற்கும் பணியாற்றிய பிறகு, கீல் தாஸ் கோஹிஸ்தானி 2024 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் இணை அமைச்சராக பதவி உயர்வுக்கான ஒப்புதலைப் பெற்றார்.

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: