இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்த மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

இஸ்ரேலும்-ஈரானும் தாம் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இரு தரப்பிலும் அதிருப்தி தெரிவித்த அவர், "இஸ்ரேல்" மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

இஸ்ரேலும்-ஈரானும் தாம் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இரு தரப்பிலும் அதிருப்தி தெரிவித்த அவர், "இஸ்ரேல்" மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Trump says Israel

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்த மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

இஸ்ரேலும்-ஈரானும் தாம் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இரு தரப்பிலும் அதிருப்தி தெரிவித்த அவர், "இஸ்ரேல்" மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

Advertisment

ஹேக்கில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட உடனேயே இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்ததை கடுமையாக விமர்சித்தார். "ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட உடனேயே இஸ்ரேல் குண்டுகளைப் பொழிந்தது" என்று அவர் கூறினார்.

மேலும், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். "அவர்களின் அணுசக்தி திறன்கள் அழிந்துவிட்டன, அவர்கள் ஒருபோதும் தங்கள் அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க மாட்டார்கள்," என்று அவர் உரிமை கோரினார். இதற்கு பிறகு, ட்ரூத் சோஷியல் பதிவில், டிரம்ப் இஸ்ரேலை நோக்கி, "அந்த குண்டுகளைப் போடாதீர்கள். அப்படிச் செய்தால், விதிமீறல். உங்கள் விமானிகளை இப்போதே அழைத்து வாருங்கள்," என்று கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அதிபர் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே செவ்வாய்க்கிழமை காலை இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சுமார் 2.5 மணி நேரத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரம் இரவு 10:30 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் "ஈரான் ஏவுகணை தாக்குதல்" என்று விவரித்ததற்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலிய ஊடகங்கள் 2 ஏவுகணைகளை பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாகத் தெரிவித்தன.

Advertisment
Advertisements

இருப்பினும், போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு எந்த ஏவுகணைகளையும் ஏவவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. அதை பொருட்படுத்தாமல், இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், தெஹ்ரானுக்கு எதிராக விரைவான இராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகக் கூறினார்

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில், "போர்நிறுத்தத்தை ஈரான் மீறியதற்குப் பதிலடியாக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகள் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்த இஸ்ரேலியத் தற்காப்புப் படைக்கு (IDF) நான் உத்தரவிட்டு உள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "அமெரிக்க அதிபரால் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை ஈரான் முழுமையாக மீறி, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதைக் கருத்தில் கொண்டு ஆட்சி இலக்குகள் மற்றும் தெஹ்ரானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை முறியடிக்கும் வகையில், நேற்றைய நடவடிக்கை தொடர்ச்சியாக தெஹ்ரான் மீதான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை தொடர IDFக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

Iran Israel President Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: