Advertisment

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்; ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்தார்; ஜேம்ஸ் கிளவர்லி புதிய உள்துறை செயலாளராக நியமனம்

author-image
WebDesk
New Update
suella and rishi sunak

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் பிரதமர் ரிஷி சுனக் (புகைப்படங்கள் ஃபேஸ்புக்)

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவி நீக்கம் செய்துள்ளார், வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி உள்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: UK PM Rishi Sunak sacks Suella Braverman; James Cleverly named new Home Secretary

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி, சுயெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக உள்துறை மந்திரி பதவிக்கு வருவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லண்டன் காவல்துறை பாலஸ்தீன சார்புக்கு ஆதரவளிக்கிறது என்று குற்றம் சாட்டி சுயெல்லா பிரேவர்மேன் எழுதிய கட்டுரை காரணமாக எழுந்த பதட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில், ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேனை ஆதரிக்க விரும்பினார், வியாழன் அன்று அவரது எண். 10 அலுவலகம், பிரதம மந்திரி "அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, ஆனால் சுயெல்லா பிரேவர்மேனின் கருத்துகளை ரிஷி சுனக் ஏற்கவில்லை.

பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு பதிலளித்த சுயெல்லா பிரேவர்மேன், "இன்னும் சரியான நேரத்தில் மேலும் தகவல்களை வெளிப்படுத்துவேன்" என்றார். "உள்துறை அமைச்சராக பணியாற்றியது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் நான் சரியான நேரத்தில் மேலும் தகவல்களை கூறுவேன்," என்று அவர் கூறியதாக PA மீடியாவால் கூறப்பட்டுள்ளது.

பி.பி.சி.,யில் ஒரு கட்டுரையின்படி, சுயெல்லா பிரேவர்மேனுக்கு அரசாங்கத்தில் ஜூனியர் வேலை வழங்கப்பட்டது, ஆனால் அதை ஏற்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

சுயெல்லா பிரேவர்மேன் கேபினட் பதவியை பாதியிலேயே விட்டுச் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2022 இல் லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தின் போது, ​​சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக பணியாற்றினார், ஆனால் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணத்தை அனுப்புவதன் மூலம் அமைச்சர் குறியீட்டை மீறியதற்காக பதவி விலகினார். ஆறு வாரங்களுக்குப் பிறகு, புதிய கன்சர்வேடிவ் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றபோது சுயெல்லா பிரேவர்மேன் மீண்டும் அந்தப் பதவிக்குக் கொண்டுவரப்பட்டார்.

காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்பாக லண்டனில் நடத்தப்படும் "வெறுப்பு அணிவகுப்புகள்" குறித்து சுயெல்லா பிரேவர்மேன் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதன்கிழமை பிரிட்டிஷ் நாளிதழான தி டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இடதுசாரி காரணங்களுக்காக மெட்ரோபொலிட்டன் அதிகாரிகள் மென்மையான நிலைப்பாட்டை எடுப்பதாக சுயெல்லா பிராவர்மேன் குற்றம் சாட்டியிருந்தார்.

"இந்த அணிவகுப்புகள் காசாவுக்கான உதவிக்கான கூக்குரல் மட்டுமே என்று நான் நம்பவில்லை," என்று சுயெல்லா பிரேவர்மேன் எழுதினார், "அவை சில குழுக்களின் முதன்மையை வலியுறுத்துவதாகும், குறிப்பாக இஸ்லாமியர்கள், வடக்கு அயர்லாந்தில் நாம் அதிகம் பார்க்கப் பழகிவிட்டோம்,” என்றும் சுயெல்லா பிரேவர்மேன் குறிப்பிட்டு இருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment