புதன் கிழமையன்று ஐநா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போர்களின் விளைவாக கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் போர் சூழல் மிகுந்த பகுதிகளில் வாழும் பல குழந்தைகளை பாலியல் தேவைகளுக்காகவும், ராணுவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. போர் சூழலில் வான்வழி தாக்குதல்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை தாக்குதல்களில் காயம்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் 2016ஐ விட 2017ல் அதிகமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஐநா இது குறித்து பேசும் போது, இதற்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவும், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்து ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் அரபு நாடுகளும் தான் என குற்றம் சாட்டியிருக்கின்றது. ஏமன் நாட்டில் சவுதி அரேபிய மற்றும் அமீரகம், அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு நடத்திய தாக்குதல்களில் மட்டும் 1300 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இறந்த குழந்தைகளில் சிலர் தீவிரவாதக் குழுக்களில் வீரர்களாகவும் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“உலகில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இருக்கும் அதே உரிமைகள் இவர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து உலக நாடுகள் செயல்பட வேண்டும். அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்” என்று ஐநாவின் குழந்தைகள் நலனுக்கான பிரதிநிதி விரிஜினியா கம்பா தெரிவித்திருக்கின்றார்.
கடந்த ஆண்டு மட்டும் 21,000 குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் பதிவாகியிருக்கின்றது. அதில் 10,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஈராக், மியான்மர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, தெற்கு சூடான், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகமாக உள்ளன. 2016ல் இந்த வன்முறைகள் 15,500 என்ற அளவில் தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையில் வெளியிடப்பட்ட சில முக்கியத் தகவல்கள்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:United nations over 10000 children killed maimed in conflicts worldwide in
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்