இறுதிக் கட்ட போரில் மனித உரிமை மீறல் - இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை

ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையில், போர்க்குற்றங்களைத் திட்டமிடுவதில் சில்வா முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையில், போர்க்குற்றங்களைத் திட்டமிடுவதில் சில்வா முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
US bans visits by Sri Lanka army chief war crimes

US bans visits by Sri Lanka army chief war crimes

இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றிய "நம்பகமான" சான்றுகளின் அடிப்படையில் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமெரிக்காவிற்கு வருகை தர தகுதியற்றவராகிறார் என்று அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ கூறினார்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்

"ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை" என்று பாம்பியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

"பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போரில், சுமார் 40,000 வெகுஜன தமிழர்கள் இலங்கை அட்டூழியங்களில் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையில், போர்க்குற்றங்களைத் திட்டமிடுவதில் சில்வா முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,600 கோடிக்கு ஹைட்ரஜனில் இயங்கும் சூப்பர் கப்பலை வாங்கிய பில்கேட்ஸ்

போர் நடந்த சமயத்தில், இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த சவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும் மனிதாபிமான பொருள்களையும் நிறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு 2013-ல் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதியாக பதவி வகிக்கும் ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா, தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Srilanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: