/indian-express-tamil/media/media_files/2025/04/21/78KPuA2XeNCeZwVVHRTE.jpg)
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் முக்கியமான விவரங்களை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அவரது மனைவி, சகோதரர் மற்றும் தனிப்பட்ட வழக்கறிஞர் அடங்கிய ஒரு தனியார் சிக்னல் செய்தியிடல் குழுவில் பகிர்ந்து கொண்டார் என்று, சிஎன்என் மற்றும் ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய ஆதாரங்களின்படி, தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: US Defence Secretary Hegseth shared Yemen war plans in Signal chat with family: Reports
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் தனிப்பட்ட தொலைபேசி மூலம் அணுகப்பட்ட இரண்டாவது சிக்னல் அரட்டையில், ஒரு டஜன் பேர் இடம்பெற்றுள்ளதாகவும், முதலில் அவரது நெருங்கிய கூட்டாளிகளை ஒருங்கிணைக்க அவரது சர்ச்சைக்குரிய உறுதிப்படுத்தல் செயல்முறையின் போது உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஹெக்செத் தனது உறுதிப்படுத்தலுக்குப் பிறகும் இராணுவத் திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள இந்த குழுவைத் தொடர்ந்து பயன்படுத்தியதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
வெளியில் கசிந்த வான்வழித் தாக்குதல்களின் விவரங்கள், அட்டவணைகள்
இந்த தாக்குதல் தொடர்பான அரட்டையை நன்கு அறிந்த வட்டாரங்கள், ஹவுதிகள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் பற்றிய தகவல்களைச் செய்திகளில் உள்ளடக்கியதாக சிஎன்எனிடம் தெரிவித்தன. இதே போன்ற விவரங்கள் இதற்கு முன்பு, அமைச்சரவை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மற்றொரு சிக்னல் குழுவிலும் பகிரப்பட்டன. இது குறித்து தற்போது பாதுகாப்புத் துறையின் செயல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரணை நடத்தி வருகிறார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தவறாக தி அட்லாண்டிக்கின் தலைமை ஆசிரியரைச் சேர்த்த பிறகு அந்தக் குழு தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கியது. இரண்டாவது அரட்டை, தேசிய பாதுகாப்பு விஷயங்களைக் கையாள ஹெக்செத் வகைப்படுத்தப்படாத தகவல் தொடர்பு சேனல்களைப் பயன்படுத்துவது குறித்த கவலைதகளை எழுப்பியுள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்தின் வட்டாரத்தின்படி, இந்த அரட்டையில் வான்வழித் தாக்குதல்களின் அட்டவணையும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது,
முக்கியமான தரவுகளை அணுகிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்
இந்த குழுவில் பங்கேற்பாளர்களில் ஹெக்செத்தின் மனைவி ஜெனிஃபர், பாதுகாப்புத் துறையில் எந்த அதிகாரப்பூர்வ பதவியும் இல்லாத முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தயாரிப்பாளர், உள்நாட்டுப் பாதுகாப்பு இணைப்பாளராகப் பணியாற்றும் அவரது சகோதரர் பில் மற்றும் பென்டகனுக்குள் ஒரு பதவியை வகிக்கும் அவரது வழக்கறிஞர் டிம் பார்லடோர் ஆகியோர் அடங்குவர். பென்டகன் வெளியிட்ட படங்கள், ஜெனிஃபர் ஹெக்செத் பாதுகாப்பு அனுமதி பெறாவிட்டாலும், வெளிநாட்டு இராணுவத் தலைவர்களுடன் முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்வதைக் வெளிக்கொண்டு வந்தது.
அதே சமயம் இந்த அரட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அணுக தேவையான அனுமதியைப் பெற்றிருந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த வெளிப்படுத்தல் பென்டகனுக்குள் குறிப்பிடத்தக்க கொந்தளிப்புக்கு மத்தியில் வந்துள்ளது. கடந்த வாரம், ஹெக்செத் மூன்று மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். உயர் ஆலோசகர் டான் கால்டுவெல், துணைத் தலைமைத் தளபதி டேரின் செல்னிக் மற்றும் பாதுகாப்புத் துணைச் செயலாளரின் தலைமைத் தளபதி கொலின் கரோல். அவரது தலைமைத் தளபதி ஜோ காஸ்பர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அவர்கள் மீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ராஜினாமா செய்த முன்னாள் பத்திரிகை செயலாளர் ஜான் உல்யோட், "இந்த செயலிழப்பு இப்போது ஜனாதிபதிக்கு ஒரு பெரிய கவனச்சிதறலாக உள்ளது. அவர் தனது மூத்த தலைமையிலிருந்து சிறந்தவராக இருக்க வேண்டும்" என்று சி.என்.என். இடம் கூறினார். இந்த பணிநீக்கங்கள் திட்டங்கள் தொடர்பான கசிவுகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் உல்யோட் மறுத்தார், மேலும் அதிகாரிகள் யாரும் பாலிகிராஃப் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் சிலர் பதிவியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான விளிம்பில் இருப்பதாகவும் கூறினார்.
கால்டுவெல், செல்னிக் மற்றும் கரோல் சனிக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், அவர்கள் பாதுகாப்புத் துறையில் எங்கள் சேவை முடிவடைந்த விதத்தால் நம்பமுடியாத அளவிற்கு ஏமாற்றமடைந்தனர்" என்றும், திட்டங்கள் வெளியானதற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.
எஃப்.பி.ஐ (FBI) விசாரணை
பனாமா கால்வாய் மற்றும் மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் எலோன் மஸ்க்குடன் பென்டகனுக்கு ரகசியமாக வழங்கப்பட்ட விளக்கத்தைத் தொடர்ந்து ஹெக்சேத் உள் கசிவுகள் குறித்து அதிகளவில் சந்தேகம் கொண்டுள்ளதாக ஆதாரங்கள் சி.என்.என்.-டம் தெரிவித்தன. திட்டங்கள் வெளியானது குறித்து எஃப்.பி.ஐ விசாரணைக்கு அவர் விடுத்த அழுத்தம், நடந்து வரும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரணையை மேற்கோள் காட்டி உதவியாளர்கள் இது குறித்து ஊக்கப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் அதிகாரப்பூர்வ கருத்துக்களை வெளியிடவில்லை. இருப்பினும், அரசியல் பின்னடைவு அதிகரித்து வருகிறது. செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், ஹெக்செத் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "பீட் ஹெக்செத் எவ்வாறு உயிர்களைப் பணயம் வைத்தார் என்பதை நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறோம்... பீட் ஹெக்செத் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று கூறினார். ஈராக் போர் வீரரான செனட்டர் டாமி டக்வொர்த், ஹெக்செத் "அவமானகரமாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார். இது குறித்து ஹெக்செத் கருத்து சொல்வதையும், பொது இடங்களில் நிகழ்வுகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.