scorecardresearch

தீபாவளிக்கு அரசு விடுமுறை கோரி அமெரிக்க எம்.பி மசோதா தாக்கல்… உலகச் செய்திகள்

தீபாவளிக்கு அரசு விடுமுறை கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்; சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு வணிக விமான இயக்கம்… உலகச் செய்திகள்

Grace Meng
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங், 2023 மே 26, வெள்ளிக்கிழமை, தீபங்களின் திருவிழாவான தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் சபையில் அறிமுகப்படுத்தினார். (புகைப்படம்: PTI)

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

தீபாவளிக்கு விடுமுறை கோரி அமெரிக்க எம்.பி மசோதா தாக்கல்

ஒரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபங்களின் திருவிழாவான தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்க வழிவகை செய்யும் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார், இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களால் வரவேற்கப்பட்டது.

“உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கும், குயின்ஸ், நியூயார்க் மற்றும் அமெரிக்காவில் உள்ள எண்ணற்ற குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கும் தீபாவளி ஆண்டின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும் என்று பிரதிநிதிகள் சபையில் மசோதாவை அறிமுகப்படுத்திய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் செய்தியாளர்களிடம் கூறினார்.

தீபாவளி தினச் சட்டம், காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியால் சட்டமாக கையெழுத்திடப்பட்டால், அமெரிக்காவில் 12 வது கூட்டாட்சி அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக தீபாவளி தினம் கடைபிடிக்கப்படும்.

தீபாவளிக்கு ஒரு அரசு விடுமுறையை அளித்தல் மற்றும் அது வழங்கும் விடுமுறை நாள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும், மேலும் தேசத்தின் மாறுபட்ட கலாச்சார அமைப்பை அரசாங்கம் மதிக்கிறது என்பதை நிரூபிக்கும் என்று கிரேஸ் மெங் கூறினார். மேலும், “குயின்ஸில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒரு அற்புதமான நேரம், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் பலருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பார்ப்பது எளிது. அமெரிக்காவின் பலம் இந்த தேசத்தை உருவாக்கும் பல்வேறு அனுபவங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களில் இருந்து பெறப்பட்டது,” என்றும் கிரேஸ் மெங் கூறினார்.

“எனது தீபாவளி தினச் சட்டம், இந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைத்து அமெரிக்கர்களுக்கும் தெரிந்துக் கொள்வதற்கும், அமெரிக்க பன்முகத்தன்மையின் முழு முகத்தைக் கொண்டாடுவதற்கும் ஒரு படியாகும். இந்த மசோதாவை காங்கிரசின் மூலம் நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கிரேஸ் மெங் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கலவரம்; குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி

இந்தியாவில் பிறந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி அமித் மேத்தா, 2020 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் மீதான வன்முறைத் தாக்குதலுடன் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலை முறியடிக்கும் முயற்சிகளுக்காக தீவிர வலதுசாரி அரசாங்க எதிர்ப்பு போராளிகளின் நிறுவனருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பு ஸ்டீவர்ட் ரோட்ஸுக்கு சில கடினமான வார்த்தைகளைக் கூறினார்.

இந்தியாவில் பிறந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி அமித் மேத்தா

தனது 50களின் முற்பகுதியில் இருக்கும் அமித் மேத்தா, ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க தலைநகர் மீதான வன்முறைத் தாக்குதலில் அவரது பங்கிற்காக தீவிர வலதுசாரி அரசாங்க எதிர்ப்பு போராளிகளின் தலைவரான ஸ்டீவர்ட் ரோட்ஸுக்கு வியாழனன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பிடன் வெற்றி பெற்ற 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலவரத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மிக நீண்ட தண்டனை ஸ்டீவர்ட் ரோட்ஸின் தண்டனையாகும்.

மே 28ல் முதல் உள்நாட்டு தயாரிப்பு வணிக விமானத்தை இயக்க சீனா திட்டம்

சீனாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் C919 ஞாயிற்றுக்கிழமை தனது முதல் வணிக விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு ஊடக அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனப் பயணிகள் ஜெட் C919, குவாங்டாங் மாகாணத்தின் ஜுஹாய் நகரில், சீன சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியில். (ராய்ட்டர்ஸ்)

அரசுக்கு சொந்தமான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (CEA) விமானத்தின் முதல் வணிக விமானத்தை மே 28 அன்று ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்கிற்கு அறிமுகப்படுத்தும் என்று அரசு நடத்தும் CGTN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

C919 ஆனது சீனாவின் வணிக விமானக் கழகத்தால் (COMAC) உருவாக்கப்பட்டது, மேலும் இது கடந்த செப்டம்பரில் சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகத்தால் வணிக வகைச் சான்றிதழை வழங்கியது.

உக்ரைன் – ரஷ்யா போர்; கிளினிக் மீதான தாக்குதலில் ஒருவர் மரணம்; 15 பேர் காயம்

கிழக்கு உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் உள்ள கிளினிக் மீது வெள்ளிக்கிழமை ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மே 26, 2023 அன்று உக்ரைனின் டினிப்ரோவில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் பெரிதும் அழிக்கப்பட்ட கிளினிக்கின் தளத்தில் ஒரு மீட்பர் பணிபுரிகிறார். (புகைப்படம்/ REUTERS/ மைகோலா சினெல்னிகோவ்)

இந்த தாக்குதலை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று அவர் கண்டனம் செய்தார், மேலும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் கடுமையான போர்க்குற்றம் என்று அழைத்தது. ஜெனீவா உடன்படிக்கை என்பது போரில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை பற்றியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Usa mp files bill to federal leave for diwali china commercial flight today world news

Best of Express