New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/05/h6.jpg)
பாகிஸ்தானில் உள்ள கல்லூரி மாணவர்கள் தனது நண்பனுக்கு லவ் பிரேக்கப் ஆன செய்தியை கேட்டு, அதை கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
பள்ளி பருவத்தில் தொடங்கி, கல்லூரி காலம் வரை நம்மால் மறக்க முடியாத சில உறவுகள் நம்மை கடந்து செல்லும். அப்படி ஒரு உறவு தான் நண்பர்கள். எதிரி இல்லா மனிதன் கூட இருப்பான், ஆனால், நண்பன் இல்லாத மனிதன் இருக்கவே மாட்டான்.
இப்படி, எந்தவித இரத்த சம்பந்தமும் இல்லாமல் நம்மை சுற்றி சுற்றி வரும் உறவான நட்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. இதே கல்லூரி பருவத்தில் தான் பெரும்பாலோனோருக்கும் முதல் காதலும் வந்து செல்கிறது. கூட்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு காதல் வந்துவிட்டது என்றால் நண்பர்கள் அவரை சும்மா விடமாட்டார்கள். எப்போதும் கலாய்ப்பது, ஓட்டுவது, வம்பு இழுப்பது என இதையே ஒரு தொழிலாக செய்வார்கள். அதே நண்பனுக்கு காதல் தோல்வி வந்தாலும் அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்வதும் இதே நண்பர்கள் கூட்டம் தான். ’
இப்படி காதல், நட்பு இவை இரண்டுமே ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபங்கள். அப்படி தான் பாகிஸ்தானில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு லவ் பிரேக்கப் ஆகியுள்ளது. ஆனால், இதை அவரின் நண்பர்கள் கேட் வெட்டியும், மாலை அணிந்தும் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?time_continue=77&v=wAjWDfzQf1Q
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.