ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலா படகு மாயம்
ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் படகில் 2 சிறுவர்கள் உள்பட 24 சுற்றுலா பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர்.
இந்த படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு ஆபத்தில் இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் படகு கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான படகை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. படகை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
கொரோனா-குணமடைந்தோர் எண்ணிக்கை 46.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.90 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரத்து 276 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 42 ஆயிரத்து 206 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து
தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வரை வேகமாக பரவியதால், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடி விபத்தில் அங்கு சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் பலர் உயிரிழந்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார். மேலும் தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்டை நாட்டிலும் முகக் கவசம் கட்டாயம்.. இம்ரான் கான் பகிரங்க குற்றச்சாட்டு.. மேலும் செய்திகள்
இலங்கைக்கு இந்தியா மருத்துவ உதவி
இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் ஆஸ்பத்திரிகள் முடங்கி கிடக்கின்றன.
எனவே, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil