வங்கதேச அரசியல் களம்: யூனுஸ் ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி - பதவியில் தொடர்வார் என ஆலோசகர் உறுதி

"அவர் (யூனுஸ்) நிச்சயமாகப் பதவியில் தொடர்வார். எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மிக முக்கியமானது; இந்த கடமையை எங்களால் கைவிட முடியாது" என்றும் மஹ்முத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"அவர் (யூனுஸ்) நிச்சயமாகப் பதவியில் தொடர்வார். எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மிக முக்கியமானது; இந்த கடமையை எங்களால் கைவிட முடியாது" என்றும் மஹ்முத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yunus

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ் ராஜினாமா செய்யப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு மத்தியில், அவர் பதவியில் தொடர்வார் என அவரது அமைச்சரவை ஆலோசகர் ஒருவர் நேற்று (மே 24) தெரிவித்தார்.

Advertisment

 

 

Advertisment
Advertisements

திட்டமிடப்படாத ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆலோசகர் வாஹிதுதின் மஹ்முத், "அவர் (யூனுஸ்) ராஜினாமா செய்வதாக சொல்லவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளையும் பொறுப்புகளையும் மேற்கொள்வதில் பல தடைகளை எதிர்கொண்டாலும், அவற்றை நாங்கள் கடந்து வருகிறோம் என்று கூறினார்" எனத் தெரிவித்தார். 

மேலும், "அவர் (யூனுஸ்) நிச்சயமாகப் பதவியில் தொடர்வார். எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மிக முக்கியமானது; இந்த கடமையை எங்களால் கைவிட முடியாது" என்றும் மஹ்முத்  திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக, அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், தம்மால் செயல்பட முடியாத நிலை உள்ளதாகக் கூறி ராஜினாமா செய்ய பரிசீலிப்பதாக மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர்களிடம் யூனுஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும், ஆனால்,  ராஜினாமா செய்ய வேண்டாம் என்று மற்றவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்ளா நகர் பகுதியில் தேசிய பொருளாதார கவுன்சிலின் (ECNEC) செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, யூனுஸ் திடீரென ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில் அமைச்சர்களுக்கு இணையாக 19 ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நடுவே, ஆலோசகர் சயீதா ரிஸ்வானா ஹசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல்கள், யூனுஸின் சீர்திருத்த திட்டம் மற்றும் கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சிக்கு வழிவகுத்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் ஆட்சியைக் கவிழ்த்த ஜூலை பிரகடனம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

என்.சி.பி அமைப்பாளர் நாகித் இஸ்லாம், யூனுஸுடனான சந்திப்பிற்குப் பிறகு, "நாட்டின் பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் வெகுஜன எழுச்சியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய யூனுஸ் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். மேலும் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

தலைமை ஆலோசகரின் ராஜினாமா மிரட்டலை பொதுமக்களின் ஆதரவு மற்றும் அரசியல் ஆதரவை சோதிக்கும் ஒரு நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

யூனுஸ், முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், நேற்றிரவு பேச்சுவார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். தலைமை ஆலோசகரின் செய்திப் பிரிவு தகவலின்படி, பி.என்.பி பிரதிநிதிகள் இரவு 7 மணிக்கும், ஜமாத் தலைவர்கள் இரவு 8 மணிக்கும் அவரைச் சந்திப்பார்கள்.

அப்துல் மொயீன் கான் மற்றும் சலாஹுத்தீன் அகமது உள்ளிட்ட பல மூத்த பி.என்.பி தலைவர்கள், யூனுஸ் முன்கூட்டிய பொதுத் தேர்தலை கண்காணித்து, திடீரென ராஜினாமா செய்யாமல் கண்ணியமாகப் பதவி விலக வேண்டும் என்று கட்சி நம்புவதாகக் கூறினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்த பிறகு, அரசியல் களத்தில் பி.என்.பி முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

முக்கிய ஜமாத் தலைவர் சையத் அப்துல்லா எம் தாஹெர் கூறுகையில், "அரசாங்கம் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளது. இப்போது, இந்த காலகட்டத்திற்குள் ஒரு குறிப்பிட்ட திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் - தேர்தல் மட்டுமல்ல, அரசியல் மற்றும் மாநில நிர்வாகத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டமும் அறிவிக்கப்பட வேண்டும்," என்றார்.

இருப்பினும், யூனுஸின் அமைச்சரவையில் ஒரு முக்கிய ஆலோசகரான சயீதா ரிஸ்வானா ஹசன், இடைக்கால அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக மட்டுமல்லாமல், சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

யூனுஸின் ராஜினாமா விவகாரம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமான காலக்கெடு மற்றும் மியான்மரின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராகைன் மாநிலத்திற்கு உதவி வழங்குவதற்கான மனிதாபிமான வழித்தடம் குறித்த வங்கதேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் ராணுவம் மற்றும் இடைக்கால அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் வந்துள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு, ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன் யூனுஸைச் சந்தித்தார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதாகவும், வழித்தடம் குறித்த தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
அடுத்த நாள், ஜமான் டாக்கா கண்டோன்மென்ட்டில் உள்ள மூத்த அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். இராணுவத்தின் தீவிரப் பங்கு இருந்தபோதிலும், பல மூலோபாய முடிவுகள் குறித்து தனக்குத் தெரியாது என்று அப்போது அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்ட அமலாக்கப் பணிகளைச் செயல்படுத்துவதில் இருக்கும் "கூட்ட நீதிக்கு" எதிராக கடுமையாகச் செயல்படவும் ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மாஜிஸ்திரேட் அதிகாரத்துடன் தங்கள் முகாம்களில் இருந்து வெளியே வரவழைக்கப்பட்ட துருப்புக்கள் ரோந்து மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதை காண முடிந்தது. பல ஆய்வாளர்கள் இந்த கூட்டத்தை இராணுவ பலத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய நடவடிக்கை என்று கருதினர்.

கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் போது, இராணுவம் ஒடுக்குமுறையைத் தவிர்த்து, ஹசீனா இந்தியாவிற்கு பாதுகாப்பாக வெளியேற உதவியது.

யூனுஸின் நிர்வாகம் சமீபத்தில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைக் கலைத்தது, முன்னாள் அமைச்சர்கள் உட்பட அதன் பல மூத்த தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தது.

பி.என்.பி உட்பட அரசியல் கட்சிகளிடமிருந்து அடுத்த தேர்தலுக்கான தேதியை அறிவிக்க யூனுஸ் அழைப்புகளை எதிர்கொண்டு வருகிறார். கூடிய விரைவில் தேர்தல் நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அணிதிரட்டி ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை நடத்திய மறுநாள் அவரது ராஜினாமா மிரட்டல் வெளியானது. இந்த வாரம், கட்சி மீதமுள்ள மாணவர் பிரதிநிதிகளை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரியது, அதே நேரத்தில் என்.சி.பி இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு ஆலோசகர்களை வெளியேற்றக் கோரியது, அவர்கள் அரசாங்கத்தில் தங்கியிருப்பதன் மூலம் பி.என்.பி-யின் நோக்கத்திற்கு சேவை செய்வதாகக் குற்றம் சாட்டினர்.

சுமார் 170 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த தெற்காசிய நாடு, கடந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து அரசியல் கொந்தளிப்பில் உள்ளது. 

Bangladesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: