10 ரூபாய் போதும்… ஒரு லிட்டர் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இப்படி செய்து பாருங்க!
வெறும் 10 ரூபாய் செலவில், புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான நறுமணத்துடன், பளபளப்பான சுத்தமான பாத்திரம் கழுவும் திரவத்தை நம்மாலே செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா? "Babi's Home" என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ள எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
வெறும் 10 ரூபாய் செலவில், புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான நறுமணத்துடன், பளபளப்பான சுத்தமான பாத்திரம் கழுவும் திரவத்தை நம்மாலே செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா? "Babi's Home" என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ள எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
10 ரூபாய் போதும்… ஒரு லிட்டர் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இப்படி செய்து பாருங்க!
கடைகளில் விற்கும் பாத்திரம் கழுவும் திரவங்களில் அதிகப்படியான கெமிக்கல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதிக விலை கொடுத்து வாங்கியும், கைகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். வெறும் 10 ரூபாய் செலவில், புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான நறுமணத்துடன், பளபளப்பான சுத்தமான பாத்திரம் கழுவும் திரவத்தை நம்மாலே செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா? "Babi's Home" என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ள எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
4 எலுமிச்சைப் பழங்கள்
1 லிட்டர் தண்ணீர்
2 ஸ்பூன் (பாத்திரம் கழுவும் திரவம்)
செய்முறை: முதலில் 4 எலுமிச்சைப் பழங்களையும் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், எலுமிச்சை சாறு மற்றும் துண்டுகளைச் சேர்க்கவும். இதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விடவும். சுமார் 2 நிமிடங்கள் கொதிக் கட்டும். 2 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, முழுமையாக குளிர்விக்கவும். நன்கு குளிர்ந்த பிறகு, வேகவைத்த எலுமிச்சைத் துண்டுகளை கையால் தண்ணீரில் நன்கு பிழிந்து, எலுமிச்சையின் கடைசி சொட்டு வரை கூட வீணாகாமல் எடுக்கவும். ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி, கவனமாக வடிகட்டி, எலுமிச்சை கூழ் மற்றும் விதைகளை அகற்ற வேண்டும். இந்த எலுமிச்சை கலந்த நீரில், 2 ஸ்பூன் நீங்கள் வழக்கமான பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவத்தைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலக்கவும். தற்போது பாத்திரம் கழுவும் திரவம் ரெடி!