10 ரூபாய் சோப் போதும்... பாத்ரூம் பளிச்சென மாற இப்படி யூஸ் பண்ணுங்க!
உங்கள் குளியலறையில் விடாப்பிடியான உப்புக்கறைகள் மற்றும் நீங்காத அழுக்குகளை நீக்க போராடி சோர்ந்துவிட்டீர்களா? வெறும் 10 ரூபாயில் குளியலறையை 'பளிச்சுன்னு' பிரகாசிக்க வைக்கலாம். எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
உங்கள் குளியலறையில் விடாப்பிடியான உப்புக்கறைகள் மற்றும் நீங்காத அழுக்குகளை நீக்க போராடி சோர்ந்துவிட்டீர்களா? வெறும் 10 ரூபாயில் குளியலறையை 'பளிச்சுன்னு' பிரகாசிக்க வைக்கலாம். எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
10 ரூபாய் சோப் போதும்... பாத்ரூம் பளிச்சென மாற இப்படி யூஸ் பண்ணுங்க!
உங்கள் குளியலறையில் விடாப்பிடியான உப்புக்கறைகள் மற்றும் நீங்காத அழுக்குகளை நீக்க போராடி சோர்ந்துவிட்டீர்களா? எவ்வளவு தேய்த்தாலும், வெள்ளைக் கறைகளும் அழுக்குப் படலங்களும் டைல்ஸ் மற்றும் குழாய்களில் இருந்து நீங்காது. அடுத்த முறை விலை உயர்ந்த, ரசாயனம் கலந்த கிளீனரை வாங்குவதற்கு முன், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று ரூ.10 சோப்புக் கட்டியை வாங்குங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சக்திவாய்ந்த திரவத்தை உருவாக்கி, குளியலறையை 'பளிச்சுன்னு' பிரகாசிக்க வைக்கலாம். எப்படி என்று கோமூஸ் லைப்ஸ்டைல் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்: ஒரு சாதாரண ரூ.10 சோப்புக் கட்டி, பேக்கிங் சோடா (சமையல் சோடா), பாத்திரம் கழுவும் திரவம் (Dishwashing Liquid): (நீங்கள் விரும்பும் பிராண்ட்), எலுமிச்சை 1 முழுப் பழம் அல்லது வினிகர், கல் உப்பு, தண்ணீர் ஆகியன.
செய்முறை:
முதலில், சோப்புக் கட்டியிலிருந்து கால் பகுதியை ஒரு பாத்திரத்தில் துருவிக் கொள்ளுங்கள். துருவிய சோப்புடன், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் முழு எலுமிச்சையின் சாற்றைச் சேர்க்கவும். அந்த கலவை நுரைத்து பொங்க வேண்டும். அத்துடன் கல் உப்பையும், சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் கரையும் வரை நன்கு கலக்கவும். எளிதாகப் பயன்படுத்த, இந்தத் திரவத்தை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.
Advertisment
Advertisements
பயன்படுத்தும் முறை:
இப்போது, உங்கள் குளியலறையில் இந்த திரவத்தை தெளிக்கலாம். தரை, டைல்ஸ், குழாய்கள் மற்றும் கறை படிந்திருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த திரவத்தைத் தெளிக்கவும். குறைந்தது 30 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். இது, அதிலுள்ள இயற்கை அமிலங்கள் மற்றும் காரணிகள் கடினமான தாதுப் படிவுகளையும் அழுக்குகளையும் நீக்கும். அரை மணி நேரம் கழித்து, நன்கு தேய்க்கவும். விடாப்பிடியாக இருந்த கறைகள் எளிதாக நீங்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குளியலறையை கடினமான வேலையாகக் கருதாமல், எப்போதும் "பளிச்" என்று பிரகாசமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கலாம்.