Advertisment

24 நொடிகளில் ஐம்பது தமிழ் எழுத்துக்களை டைப் செய்து அசத்தும் 6 வயது சிறுமி

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி   ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisment

 கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் தம்பதியரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ - ஆறு வயதான சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின்   ஆர்வத்தை கண்ட பெற்றோர் தனியாக பயிற்சி அளித்துள்ளனர்.

 

 

இதனை தொடர்ந்து சிறுமி, "தமிழ் எழுத்துக்களான பனிரெண்டு உயிர் எழுத்துக்கள்" "18 முதன்மை உயிர்  மெய் எழுத்துக்கள்" "18 மெய்யெழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்து மற்றும் ஓம் எனும் ஆன்மீக எழுத்து என ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து" இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

குறிப்பாக ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் ஆறு வயதான சிறுமி செய்த இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தொல் காப்பிய தமிழ் சங்கமம்  தமிழ் எழுத்துக்களில் சிறுமி செய்த இந்த சாதனையை  பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம் 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment