காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியவில்லையே என்று சிக்கல் இல்லத்தரசிகளுக்கு நீங்காத ஒன்றாகும். பெரும்பாலும் காய்கறி, பழங்கள் மூன்று நாள்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் கணக்கில், மொத்தமாக வாங்கிவிடுவோம். ஆனால், சில சமயத்தில் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே அவற்றின் ஃப்ரெஷ்னஸ் சென்றுவிடுகிறது. அதற்கு, வானிலை, ஈரப்பதம், பொருளின் ஃப்ரஷ்னஸ் என பல காரணிகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் பிரிட்ஜில் வைத்துவிட்டால், காய்கறி, பழங்கள் ஃப்ரஷ்ஷாக இருக்கும் என நினைக்கலாம். ஆனால், அவற்றால் சிறிது நாள்கள் மட்டுமே பாதுகாக்க முடியும். நீண்ட நாள்களுக்கு காய்கறி, பழங்களின் ஃப்ரஷ்னஸ் அழியாமல் பாதுகாக்க, கூடுதல் பணிகளை செய்தாக வேண்டும். அதன்படி, ஃப்ரஷ்ஷனஸை பாதுகாக்கும் 5 சூப்பர் டிப்ஸ்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
குளிர்ந்த நீரில் பாதுகாத்தல்
கேரட், செலரி, கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை ஒரு ஜாரிலோ அல்லது குளிர்ந்த நீரில் நிரப்பப்பட்ட கொள்கலனில் சேமித்து வைக்கலாம். ஆனால், இந்த காய்கறிகளின் ஃப்ரஷ்னஸை நீடிக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுவது அவசியமாகும்.
வினிகர் பயன்படுத்தலாம்
ஒரு ஜாரிலோ அல்லது கொள்கலனிலோ, நீரை நிரப்பி வினிகரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எந்த வகையான பெர்ரி, ஆப்பிள்கள், பச்சை வெங்காயம், மிளகுத்தூள், தக்காளி அல்லது பேரிக்காய் ஆகியவற்றை சேர்க்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்த கலவையில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு, புதிய நீரில் கழுவ வேண்டும்.இப்போது, இவற்றை உங்கள்பிரிட்ஜில் நீண்ட நேரம் சேமிக்கலாம்.
காகித துண்டுகளில் சுருட்டுவது
காகித துண்டுகள் நாம் அனைவரும் ஏராளமாக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றாகும். இந்த காகித துண்டுகளை காய்கறிகளை பாதுகாக்கவும் பயன்படுத்தலாம். இந்த முறை பச்சை இலை காய்கறிகளை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இலைக் காய்கறிகள் சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை காகித துண்டுகளில் சுருட்டிகொள்வது அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சுவதை தடுக்க உதவுகிறது.
ஃப்ரீசர்
பிரிட்ஜில் வைக்கக்கூடிய பழங்கள் அல்லது காய்கறிகள் உங்களிடம் இருந்தால், அவற்றை ஒரு கொள்கலனில் மாற்றி, ஃப்ரீசர் வைத்துவிடுங்கள்.இதில், அவை கெட்டுப்போகாது, பின்னர் பொறுமையாக எடுத்தும் உபயோகித்துக்கொள்ளலாம்.
வேரை வெட்டுதல்
டர்னிப், அஸ்பாரகஸ், பச்சை வெங்காயம் போன்ற சில வேர் காய்கறிகள் விரைவில் கெட்டுவிடும். அவை நீண்ட காலம் நீடிக்க, இவற்றின் வேர்களை வெட்டி தண்ணீரில் சேமித்து வைக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள 5 எளிய வழியமுறைகளை பின்பற்றி, நீங்கள் பணம் கொடுத்தும் வாங்கும் காய்கறிகள், பழங்கள் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil