/indian-express-tamil/media/media_files/2025/04/23/IoYigmuICBnj28iAT8Eu.jpg)
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதாலும், மன அழுத்தத்தை நிர்வகிப்பதாலும் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆரோக்கிய ஆலோசகர் மைனோ சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கான 5 டிப்ஸ்களை அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: We asked doctors about viral tips on reducing blood pressure, this is what they said
சாப்பிட்ட பிறகு 15 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்
சாப்பிட்டு முடித்ததும் 15 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இதற்காக உங்கள் வீட்டைச் சுற்றி நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறியும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இப்படி செய்யும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படக் கூடும்.
காலையில் புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சாதாரணமாக யோகர்ட்டுடன் ஓட்ஸ் மற்றும் பெர்ரி பழங்களை சாப்பிடலாம். காலை நேரத்தில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக்கும்.
5 கிராம் நார்ச்சத்து பெறுவதை இலக்காக கொள்ளுங்கள்
நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. தினமும் காலையில் 25 முதல் 30 கிராம் வரை பெர்ரிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மதிய நேரத்தில் நார்ச்சத்து நிறைந்த ஸ்மூத்தி மற்றும் இரவில் நிறைய காய்கறிகளை சாப்பிடலாம்.
7-9 மணிநேர தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
சீரான தூக்கம் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் தூக்க சுழற்சியை மேம்படுத்த, ஒரு நிலையான படுக்கை நேர வழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சமூக ஊடகங்களைத் தவிர்க்கவும்.
மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்கவும்
உங்களின் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள். சிம்பிளான நடைபயிற்சி, வாசிப்பு அல்லது ஒரு கப் காபி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இவை அனைத்திலும் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து தெரிந்து கொள்ள மருத்துவர் மஞ்சுஷா அகர்வாலிடம் கருத்து கேட்கப்பட்டது. "உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மன அழுத்த நிலைகளை திறம்பட நிர்வகிக்க முயற்சி செய்யுங்கள். அமைதியாக இருக்க உதவும் விஷயங்களைச் செய்வதில் அதிக கவனம் செலுத்துங்கள். இதில் ஆழ்ந்த சுவாசம், தியானம், நடைபயிற்சி, இசை கேட்பது, உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தைப் பார்ப்பது அல்லது உங்கள் சோபாவில் படுத்துக் கொள்வது போன்ற எளிமையானவை அடங்கும்" என்று அவர் கூறினார்.
"7-9 மணிநேர தூக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை தினசரி 30 நிமிடங்கள் மேற்கொள்ளலாம். வாரத்திற்கு மூன்று நாட்களாவது குறைந்தபட்சம் 25 நிமிடங்களுக்கு நல்ல இசையைக் கேட்கலாம். இது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்" என்று மருத்துவர் சுதிர் குமார் தெரிவித்தார்.
"கார்போஹைட்ரேட்டுகளை விட நார்ச்சத்து மற்றும் புரதத்தைத் தேர்ந்தெடுப்பது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. கூடுதலாக உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இது உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். யோகா, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், கார்டியோ போன்றவற்றை தினசரி 30 முதல் 50 நிமிடங்கள் செய்ய வேண்டும்" என்று மருத்துவர் அகர்வால் அறிவுறுத்துகிறார்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவுக்கு பின்னர் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
"நீங்கள் தீவிரமாக புகைபிடிப்பவராகவோ அல்லது மது அருந்துபவராகவோ இருந்தால், இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதிகப்படியான மது அல்லது புகைபிடித்தல் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும். புகைபிடித்தல் அல்லது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்துவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்" என்று மருத்துவர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.