Tirupati Vaikunda Ekadasi day : உலக பிரசித்திபெற்ற வைணவ தலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்க திருப்பதியில், 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கு 5 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இதற்கிடையில், அக்டோபர் 29ஆம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
பின்னர் மறுநாள் காலை 3.15 மணிக்கு திருநடை திறக்கப்படும். தொடர்ந்து கோவில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும்.
இந்த நிலையில், டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“