தவறான முறையில் சாப்பிடப்படும் 6 உணவுகள்; அவற்றை எப்படி சரியாக சாப்பிடுவது தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளை, அதன் முழுமையான சத்துக்களைப் பெற முடியாத வகையில் தவறாக உட்கொள்கிறோம். அவற்றை எப்படிச் சரியாகச் சாப்பிடலாம் என்பதை இங்கு காண்போம்.

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளை, அதன் முழுமையான சத்துக்களைப் பெற முடியாத வகையில் தவறாக உட்கொள்கிறோம். அவற்றை எப்படிச் சரியாகச் சாப்பிடலாம் என்பதை இங்கு காண்போம்.

author-image
WebDesk
New Update
foods 6

தக்காளியைச் சமைத்துச் சாப்பிடுவது (கறி, சூப், சாஸ் போன்றவற்றில்), அதன் முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்டான லைகோபீன் உடலால் எளிதில் உறிஞ்சப்பட உதவுகிறது.

ஒரு உணவுப் பொருளை அனைவரும் சரியான முறையில் சாப்பிடுகிறோமா என்றால் இல்லை. அதை அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியம் கருதி, அவர்களை அறியாமலே தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். 

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளை, அதன் முழுமையான சத்துக்களைப் பெற முடியாத வகையில் தவறாக உட்கொள்கிறோம். அவற்றை எப்படிச் சரியாகச் சாப்பிடலாம் என்பதை இங்கு காண்போம்.

1. தக்காளி

தவறான முறை: பச்சையாக மட்டுமே உண்பது.

சரியான முறை: தக்காளியைச் சமைத்துச் சாப்பிடுவது (கறி, சூப், சாஸ் போன்றவற்றில்), அதன் முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்டான லைகோபீன் உடலால் எளிதில் உறிஞ்சப்பட உதவுகிறது. இது இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2. ஆளி விதைகள் (Flax Seeds)

தவறான முறை: விதைகளை முழுதாகச் சாப்பிடுவது.

சரியான முறை: ஆளி விதைகளை அரைத்துச் சாப்பிட வேண்டும். முழு விதைகளும் செரிமானம் ஆகாமல் வெளியேறிவிடும். ஆனால், அரைத்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

3. பூண்டு

தவறான முறை: நறுக்கிய உடனேயே சமைப்பது.

Advertisment
Advertisements

சரியான முறை: பூண்டை நறுக்கிய அல்லது நசுக்கிய பிறகு, சமைப்பதற்கு முன் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பது நல்லது. இதனால், அதில் உள்ள நோய்களை எதிர்க்கும் முக்கியக் கூறான அலிசின் உருவாகிறது.

4. ஆப்பிள்

தவறான முறை: தோலை உரித்துச் சாப்பிடுவது.

சரியான முறை: ஆப்பிள் தோலில் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, நன்கு கழுவிவிட்டு தோலுடனேயே சாப்பிடுவது முழுமையான சத்துக்களைப் பெற உதவும்.

5. உருளைக்கிழங்கு

தவறான முறை: தோலை நீக்கிவிட்டு, பொரித்துச் சாப்பிடுவது.

சரியான முறை: உருளைக்கிழங்கைத் தோலுடன் சேர்த்து வேகவைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடலாம். இது பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கிறது.

6. அரிசி

தவறான முறை: சாதம் வடித்த பிறகு, கஞ்சியை வடித்துவிடுவது.

சரியான முறை: அரிசிக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் சேர்த்து, அந்தத் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போகும்வரை வேகவைக்க வேண்டும். இதனால், அரிசியில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: