ஆயுர்வேத முறைப்படி நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இது சிறுநீரகத்தை சரியான அளவில் வைத்துகொள்ள உதவும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சிறுநீரகத்தை பாதிக்கும்.
கொத்தமல்லி
இது சிறுநீரகத்திற்கு அதிக நன்மைகள் செய்கிறது.இது அதிக சோடியம் மற்றும் தண்ணீரை உடலில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், கொத்தமல்லி அதன் அறிகுறிகளை குணப்படுத்த உதவும்.
துளசி
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துகள் உள்ளது. உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியே அனுப்ப உதவும். இதனால் நாம் துளசியை டீ அல்லது சூடான தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம்.
புனர்நவா
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் சிறுநீர் அதிகம் வெளியேறும். இதில் உடல் சுத்திகரிக்கப்படும். மேலும் இது சிறுநீரகத்தை காப்பாற்றும்.
இஞ்சி
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. வீக்கத்தை குறைக்கும் குணங்கள் இதில் இருப்பதால், சிறுநீரகம் சேதமடையாது. நாம் இதை தினமும் டீயில் சேர்த்து சாப்பிடலாம்.
பூண்டு
இது அதிக ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். அதிக ரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சனை ஏற்பட காரணமாக அமையும்.
மஞ்சள்
இதில் குர்குமின் உள்ளது. இது வீக்கத்திற்கு எதிராக செயல்படும். மேலும் சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது. சிறுநீரகத்தை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது. சிறுநீரக செயல்பாடை ஊக்குவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“