Advertisment

பயணிகள் கவனத்திற்கு... கூடல் நகர் பராமரிப்பு பணி: 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கூடல் நகரில் பராமரிப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், நாளை 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Special trains

மதுரை அருகே கூடல் நகரில் நாளை (ஜன 9) மேம்பாட்டு பணிகள் காரணமாக 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.

Advertisment

கூடல் நகரில் பராமரிப்பு மேம்பாட்டு பணிகள் நாளை காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. 

அதன்படி, செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), மதுரை - பிகானிர் ரயில் (22631), நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர ரயில் (16321), குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128), கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர ரயில் (16322), ஓகா - ராமேஸ்வரம் ரயில் (16734), மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக‌ மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களிலும், மற்ற ரயில்கள் மானாமதுரை ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisement

 

Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment