/indian-express-tamil/media/media_files/KEnCZxG2jSl8bpsfz0Nt.jpeg)
Coimbatore
பகவத் கீதா தியான ஸ்லோகங்களை கூறி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கோவை சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன்.4ஆம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார்.
இப்படி இருக்க இவரது வீட்டின் அருகே உள்ள ராதா, பகவத் கீதை படிப்பதை திரிசூல வேந்தன் ஆர்வமுடன் கவனித்துள்ளார். இதையடுத்து, ராதா பகவத் கீதையின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை, திரிசூல வேந்தனுக்கு கற்பித்து பயிற்சி அளித்துள்ளார்.
முறையாக அளித்த பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் கீதா தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி சிறுவன் அசத்தியுள்ளார்.
இவரது இந்த சாதனைஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது..
இதுகுறித்து சிறுவன், ஏற்கனவே பஞ்சாங்கத்தை நான் வேகமாக படித்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக கீதா தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக கூறினார்.
ஒன்பது அத்தியாங்கள் கொண்ட சமஸ்கிருத கிதா தியானா ஸ்லோகங்களை கோவையை சேர்ந்தஒன்பது வயது சிறுவன் கூறுவதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.