/indian-express-tamil/media/media_files/2025/05/28/cjdB6Riw5nSAwPwuqpwh.jpg)
அழுக்கான கேஸ் ஸ்டவ் பளபளக்கும்… கொஞ்சம் உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
சமையலறையில் கால் கடுக்க நின்று சமைப்பது ஒரு கஷ்டம் என்றால், சமைத்த பின் அடுப்பை சுத்தம் செய்வது அதைவிட ரொம்ப ரொம்ப கஷ்டம். சில பெண்கள் துடைப்பதற்கு சிரமப்பட்டு கேஸ் ஸ்டவ்வின் மேல் தண்ணீரை ஊற்றி அப்படியே கழுவி விடுவார்கள். ஸ்டவ் சீக்கிரம் துருப்பிடித்து கெட்டுப் போவதற்கு தண்ணீர் ஊற்றி கழுவுவதும் காரணம். ஆகவே அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டாம். கேஸ் ஸ்டவ்வில் சமைத்து முடித்த பின்பு, அதன் மேலே சிந்தி இருக்கும் பொருட்களை எல்லாம் ஸ்பான்ச் நாரை வைத்து துடைத்து கீழே தள்ளி விடுங்கள்.
பொதுவாக வீடுகளில் சமைக்கும்போது, கேஸ் ஸ்டவ் மீது சாம்பார், குழம்பு எல்லாம் சிந்தி காய்ந்துவிடும். இதனால், கேஸ் ஸ்டவ் கறை படிந்து இருக்கும். இதை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அப்படியே சுத்தம் செய்தாலும், கேஸ் ஸ்டவ்வைத் துடைக்கப் பயன்படுத்திய துணியை அலசுவது இன்னும் சிரமமான ஒன்றாக இருக்கும். உங்களுக்காகவே இந்தியன் ரெசீப்பிஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
எலுமிச்சம் பழத்தோலை தலைகீழாக திருப்பி, பழத்துக்கு உள்பக்கம் இருக்கக்கூடிய பகுதியை கேஸ் ஸ்டவ்வில் வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். வெறும் தோல்தான். இருந்தாலும் அதில் அந்த எலுமிச்சை வாசம் இருக்கும். பிறகு கேஸ் ஸ்டவ்வின் மேல் லேசாக தூள் உப்பு தூவி விட்டு, சாதாரண ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து நன்றாக துடைத்து கொடுத்தால், கேஸ் ஸ்டவ்வில் இருக்கும் பிசுபிசுப்பு அழுக்கு கெட்ட வாடை அனைத்தும் முழுசாக நீங்கிவிடும். அதன் பிறகு ஒரு நல்ல காய்ந்த துணியை வைத்து துடைத்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.