மஞ்சள் காமாலைக்கு அருமருந்து… ஆனால் மோர் சேர்த்து தான் சாப்பிடணும்; டாக்டர் மைதிலி
கீழாநெல்லி 3 முக்கிய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை, நீரிழிவு, சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்களுக்கு கீழாநெல்லி அருமருந்து என்றே சொல்லலாம்.
கீழாநெல்லி 3 முக்கிய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை, நீரிழிவு, சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்களுக்கு கீழாநெல்லி அருமருந்து என்றே சொல்லலாம்.
மஞ்சள் காமாலைக்கு அருமருந்து… ஆனால் மோர் சேர்த்து தான் சாப்பிடணும்; டாக்டர் மைதிலி
கீழா நெல்லி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச்சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப்பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. கீழா நெல்லி சிறுநீர் பெருக்கும், விஷத்தை முறிக்கும், ரத்தசோகையை குறைக்கும்; ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளை கொல்லும், பசி உண்டாக்கும், காய்ச்சல் போக்கும். கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை. கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப்பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது.
Advertisment
ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படுகின்றது. கீழ்க்காய் நெல்லி, கீழ் வாய் நெல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. கீழாநெல்லி 3 முக்கிய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை, நீரிழிவு, சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்களுக்கு கீழாநெல்லி அருமருந்து என்றே சொல்லலாம். கீழாநெல்லியில் ஹெப்பாடோ ப்ரொடெக்டிவ் குணங்கள் அதிகமாகவே உள்ளன. இது நமது கல்லீரல் உறுப்பை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. ஹெச்.வி.பி என்ற நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை கீழாநெல்லி குறைக்கிறது என்கிறார் மருத்துவர் மைதிலி.
மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கீழாநெல்லி எப்படி பயன்படுத்த வேண்டும்?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கீழா நெல்லி பொடியை பயன்படுத்தலாம். பொடியை விட கீழாநெல்லி இலைகளை வேரோடு சேர்த்து நன்கு அரைத்தும் பயன்படுத்தலாம். காம்புடன் இருக்கக்கூடிய கீழா நெல்லி இலைகள் 5 எடுத்து மண் எதுவும் இல்லாமல் நன்கு அலசி சுத்தம் செய்த பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அரைக்கும்போது அதனுடன் 3 மிளகு, ஒரு டீஸ்பூன் அளவு கெட்டி தயிர், தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். 60 மில்லி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். கீழாநெல்லியை மோருடன் கலந்து பருவதால், அதன் நன்மைகள் அப்படியே கிடைக்கும். 30 முதல் 40 நாட்கள் குடித்து வருவதால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பின் தீவிரம் குறையும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.