எண்டோஸ்கோபி சிகிச்சை குறித்த கருத்தரங்கில் உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக மருத்துவ உலகில் எண்டோஸ்கோபி எனும் உள்நோக்கி கருவி மூலம் செய்யப்படும் இந்த நவீன வகை சிகிச்சை முறை மருத்துவ துறையில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பம் . குறித்து மருத்துவ துறை சார்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை வி.ஜி.எம்.மருத்துவமனையி்ல் "கேஸ்ட்ரோ அப்டேட் 2023"எனும் எண்டோஸ்கோபி கருத்தரங்கம் நடைபெற்றது.
காணொளி வழியாக சிகிச்சைகள் மற்றும் அது குறித்த விளக்கங்கள் நேரடியாக நடைபெறும். இதில் இந்தியா மட்டுமின்றி நேபாள்,இலங்கை,க ஆப்ரிக்கா,கிழக்கு ஆசிய மற்றும் அரேபிய நாடுகள் என உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
எண்டோஸ்கோபி சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மாநாட்டில் உலக அளவில் இருந்து மருத்துவர்கள் திருப்தீஷ் கோத்தாரி, சிவாங்கி கோத்தாரி,ரவிசங்கர்,பேராசிரியர் கிறிஸ்டோபர் கோர்,அமல் பிரியங்கா,விக்ரம் பிரதான் உட்பட இந்திய நாட்டை சேர்ந்த பிரபல வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.
மருத்துவ துறையில் பெரும் வளர்ச்சியாக பார்க்கப்படும் எண்டோஸ்கோபி சிகிச்சை முறைகளில் உள்ள நவீன தொழில் நுட்பங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
குறிப்பாக சில சவாலான சிகிச்சை முறைகளை நேரடியாக எண்டோஸ்கோபி வாயிலாக செய்யும் சிகிச்சைகள் நேரடியாக காணொளி மூலம் விளக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் இது போன்ற சிகிச்சை முறைகளை சிறிய திரைகளில் மட்டுமே காண முடிந்தது. இந்த நிலையில், தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரிய அகன்ற திரைகளிலும் காண்பதால் மிக தெளிவாக சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்து கொள்ள இயலும்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“