தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்புக்குரியது. ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஆடிக்கிருத்திகை என இத்தனை வைபவங்கள் இந்த மாதத்தில் வருகின்றன.. இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அதனால்தான், ஆடிச் செவ்வாயிலும் வெள்ளியிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் அம்பாள் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த ஆண்டு ஆடி முதல் ஞாயிறு மிக சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆடி முதல் ஞாயிறு, ஆடித் தபசு, ஆடி பவுர்ணமி, ஹயக்ரீவர் ஜெயந்தி, குரு பூர்ணிமா இப்படி 5 விசேஷங்கள் இந்த முதல் ஞாயிற்றுக் கிழமையில் வருகின்றன. இந்த நாளில் எப்படி வழிபட வேண்டும் என்று பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“