தமிழ் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையில் ஆடிபெருக்கும் ஒன்று. இந்நிலையில் தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதத்தின் 18 வது நாளில் இது கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட்டு 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடி பெருக்கு 2023: கொண்டாடுவதற்கான தேவை ?
பருவமழைக்கு நன்றிச் சொல்லத்தான் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த காலத்தில்தான் பருவமழை தொடங்கும். ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் அளவு அதிகரிக்கும். இது பயிர்களை வளர்க்க உதவும். இயற்கையின் தாயான தண்ணீரை மக்கள் வணங்குவர்.
எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்த நாளில் குடும்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து இறைவனிடம் நல்ல அறுவடை நடைபெற வேண்டும் என்று வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த நாளில் பல வகையான சாதம் சமைக்கப்படும். மேலும் ஸ்பெஷல் உணவுகள் சமைக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்படும். அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று மா இலையில் செய்த விளக்கை ஏற்றி நீரில் விடுவார்கள்.
சிலர் தங்கள் மருமகனை அழைத்து, உணவு, புதிய ஆடைகள், பரிசுகளை வழங்குவர். இந்த நாளில்தான் புதிதாக திருமணமான பெண்கள், தங்கள் பெற்றோர் வீட்டுக்கு சென்று, ஒரு மாதம் முழுவதும் இருப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“