இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி திருப்பதி தேவஸ்தானம் தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும்.
நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் டிக்கெட் தரப்படும். தேர்தல் விதிமுறை அமலால் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின் பெயரில் வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய இயலாது “ என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“