/indian-express-tamil/media/media_files/2025/05/12/B7rXvjj9ZmeBQAu3380D.jpg)
நம்முடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், இதற்காக சரும பராமரிப்பு முறையை நீண்ட நாட்களுக்கு பின்பற்ற வேண்டியதாக இருக்கும்.
சிலர் இது போன்ற சரும பராமரிப்புகளை தொடர்ச்சியாக செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் முகமும் இன்ஸ்டன்ட் பொலிவாக காட்சி அளிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய ஃபேஸ்பேக் குறித்து நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார். இதற்காக பப்பாளி பழம் மட்டும் இருந்தால் போதும்.
பப்பாளி பழத்திற்குள் இருக்கும் விதைகளை முற்றிலும் நீக்க வேண்டும். இதையடுத்து நமது முகத்திற்கு தேவையான அளவு பப்பாளி பழத்தை வெட்டி எடுத்து, அதனை நன்றாக குழைத்து முகத்தில் தடவலாம்.
இவ்வாறு செய்த பின்னர் சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இப்படி செய்வதால் முகம் சட்டென பொலிவாகும் என்று நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஃபேஸ்பேக் கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்கும் என்று அவர் கூறுகிறார்.
எனவே, முக்கியமான இடங்களுக்கு செல்வதற்கு முன்பாக இந்த ஃபேஸ்பேக்கை உபயோகப்படுத்தலாம் என்று நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார். மேலும், இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் கிடையாது.
நன்றி - Thagaval Kadambam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.