விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் சமூக ஆர்வலருக்கு ஆம்புலன்ஸ் வழங்கி கௌரவித்த நடிகர் பாலா!

புதுச்சேரியில் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு சிகிச்சையளித்து உதவி செய்யும் சமூக ஆர்வலருக்கு, நடிகர் பாலா சார்பாக ஆம்புலன்ஸ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Bala Ambulance

புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜ். இவர் 'குரல் அற்றவர்களின் குரல்' என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் விபத்தில் சிக்கிய நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

Advertisment

இவரது சேவையை அறிந்த நடிகர் பாலா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை யார் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அசோக் ராஜை தொடர்பு கொண்டு அவர் பராமரித்து வரும் விலங்குகளை காண வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (பிப்17) புதுச்சேரிக்கு வருகை தந்த நடிகர் பாலா, அசோக் ராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரது சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ஆம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bala Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: