தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ராயன் படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனுஷ், சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.
இந்நிலையில் தனது படம் ரிலீஸ், பிறந்தநாள் ஆகியவற்றையொட்டி தனுஷ் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன் மற்றும் பெற்றோருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“