'மகன் டாக்டர்; மகள் ஆர்க்கிடெக்ட்': வையாபுரி வீட்டில் மனைவி ஆட்சி?

தினமும் காலை 4.40 மணிக்கு மனைவி எழுந்து பூஜை செய்வார். 24 வருடங்களாக வீட்டில் கொலு வைத்து வருவது மகிழ்ச்சி- நடிகர் வையாபுரி

தினமும் காலை 4.40 மணிக்கு மனைவி எழுந்து பூஜை செய்வார். 24 வருடங்களாக வீட்டில் கொலு வைத்து வருவது மகிழ்ச்சி- நடிகர் வையாபுரி

author-image
WebDesk
New Update
vaiya

நடிகர் வையாபுரி வீட்டிற்கு சென்று கலாட்டா பிங்க் யூடியூப் சேனல் அவரது குடும்பத்தினருடன் நேர்காணல் செய்தனர். அப்போது அவர்கள் பல சுவராஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.  

Advertisment

வையாபுரியின் மனைவி ஆனந்தி  வீட்டில் வைத்திருந்த நவராத்தி கொலு பற்றி கூறினார். "24 வருடங்களாக கொலு வைத்து வருகிறோம். முதலில் 3 படிகள் தொடங்கி இப்போது 11 படிகளில் கொலு வைத்துள்ளோம். நீங்கள் கொடுத்த அயோத்தி பால ராமர் இந்தாண்டின் சிறப்பு கொலு. எனக்கு கொலுவை சரியாக வரிசையாக அடுக்கி வைப்பது தான் பிடிக்கும். அப்போது இவர் வெளியே போயிருவார்" என்று கூறினார். 

வையாபுரி பேசுகையில், "என் வீட்டில் மனைவி ஆனந்தி தான் அனைத்தையும் கவனிப்பார். நாங்கள் இன்று இவ்வளவு நல்ல நிலையில் இருக்க காரணம் அவள் தான். தினமும் காலை 4.40 மணிக்கு அவள் எழுந்து பூஜை செய்வார். அதன்பின் 5.30 மணிக்கு இருவரும் வாக்கிங் செல்வோம். பிக்பாஸ் போயிட்டு வந்த பின்  வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். குழந்தைகளை அதிகமாக படங்கள், பாடல்களை கேட்க விடமாட்டேன். என்ன மாதிரி அவர்களும் சினிமாவிற்கு வர வேண்டாம் என்று நினைத்தேன். 

Advertisment
Advertisements

இப்போது அவர்களில்  என் மகன் பல் மருத்துவர், மகள் ஆர்க்கிடெக்ட் ஆக உள்ளனர். மகளுக்கு சிறு வயதில் இருந்தே படம் வரைய பிடிக்கும். 7-வது படிக்கும் பொழுது பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்துள்ளாள். நான் என் குழந்தைகளை நேரடியாக பாராட்ட மாட்டேன். அப்பா சந்தேகம் ஆகிட்டாங்க என படித்தது போதும் என அவர்கள் விட்டுக் விடுவார்களே என நினைத்து செய்தது இல்லை. ஆனால் என் மனைவி நேராக பிள்ளைகளிடம் சொல்லுங்கள் என்று கூறுவார்" என்றார். 
 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: