ரசாயனங்கள் நிறைந்த அழகு சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான முறைகளை நாடுவது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், வெண்டைக்காயும் தயிரும் இணைந்து சருமத்திற்கு அற்புதமான பலன்களைத் தரக்கூடிய ஒரு எளிய ஃபேஸ் பேக் பற்றி நடிகை அம்பிகா தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை பார்த்து தகவல் கதம்பம் யூடியூப் பக்கத்தில் ஃபேஸ் பேக் செய்து காட்டியுள்ளதை பற்றி பார்ப்போம்.
Advertisment
நடிகை அம்பிகா இந்த ஃபேஸ் பேக் செய்ய மூன்று பிஞ்சு வெண்டைக்காய்களும், இரண்டு சிறிய ஸ்பூன் தயிரும் மட்டுமே என்கிறார். முதலில், இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். மிருதுவான பேஸ்ட் கிடைத்தவுடன், அதை உங்கள் முகத்தில் மேல் நோக்கி மெதுவாகத் தடவவும்.
பேக் நன்றாக உலரும் வரை காத்திருக்கவும். பொதுவாக 15-20 நிமிடங்கள் எடுக்கும். பேக் காய்ந்ததும், ஈரமான துணியைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு மட்டுமல்லாமல், இயற்கையான பொலிவையும் தருகிறது.
சிறந்த பலன்களைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து வர பரிந்துரைக்கிறார். தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுவதை காணலாம். இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழி என்றும் கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.