/indian-express-tamil/media/media_files/2025/09/02/nalini-saree-collections-2025-09-02-17-17-18.jpg)
Nalini Saree collections
ஒரு பெண்ணுக்குப் புடவை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல; அது ஒரு கலை, ஒரு பாரம்பரியம், ஒரு உணர்வு. ஆனால், நடிகை நளினி புடவைகளுக்கென்றே ஒரு வீட்டையே ஒதுக்கியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சாதாரணமாக, நம் வீடுகளில் அலமாரிகள் புடவைகளால் நிரம்பியிருக்கும். ஆனால், நளினியின் புடவைகளுக்கு அலமாரிகள் போதாது. ஒவ்வொரு புடவையையும் அதற்குரிய தன்மையுடன், பாதுகாப்பாக வைக்க அவர் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஒவ்வொரு வகை புடவைக்கும் தனித்தனி இடம், ஒவ்வொரு புடவையும் தனக்கென ஒரு கதையைச் சொல்வது போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ், சில்க், காட்டன், லினன், டிசைனர் புடவைகள் எனப் பல வகைப் புடவைகள் அங்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு நிறம், ஒரு டிசைன், ஒரு கலைநயம். இந்தச் சேகரிப்பு வெறுமனே வாங்கும் பழக்கம் மட்டும் அல்ல, அது ஒரு ரசனை.
புடவை மீதான தன் காதல் குறித்து ஒரு யூடியூப் நேர்காணலில் நளினி மனம் திறந்து பேசினார்.
"நான் என் சேலைகளுக்காகவே ஒரு தனி வீடு வச்சிருக்கிறேன். ஆமாங்க...அந்த வீட்டை நான் வாடகைக்கு எல்லாம் விடலை. அது முழுக்க என் சேலைகளோட சாம்ராஜ்யம்.
ஆனா ஒருமுறை ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். என் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம், என் மருமகன் முதல்முறையா அவளுக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்தாரு. அது அவளுக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. அவ அதை ரொம்ப பத்திரமா வச்சிருந்தா. ஒரு நாள் வீடு மாறும்போது அந்த புடவை எல்லாம் என்கிட்ட கொடுத்தா.
எங்க வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருந்தாங்க. என் புடவை கலெக்ஷன் எல்லாம் பார்த்தாங்க. அப்போ அவுங்களுக்கு அந்த புடவை ரொம்ப பிடிச்சிருந்தது. நானும் ஏதோ ஒரு புடவைனு நினைச்சு அதை அவங்ககிட்ட கொடுத்தேன். அப்போ எனக்கு தெரியாது, நான் கொடுத்தது என் பொண்ணோட அந்த புடவைன்னு. அப்புறமா என் பொண்ணு வந்து கேட்டபோதுதான் எனக்கு விஷயம் புரிஞ்சது. ரொம்ப கஷ்டமா போச்சு. அந்த புடவை அவளுக்கு எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சிருந்தா, நான் அந்த தப்பை பண்ணியிருக்க மாட்டேன்”, என்று நளினி அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.