நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.
ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.
அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
தற்போது நடிகை ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் ஆகியோருடன் தான் இருக்கும் படங்களை சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட ரம்யா, மலையாளத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் தற்போதைய ஷூட்டிங் பழனியில் நடந்து வருகிறது. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரம்யா ஒரு கருப்பு நிற புடவையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“