கொட்டிய முடி 3 மாதத்தில் வளர்ந்தது இப்படிதான்; நடிகை ரிஹானா ஹேர் கேர் டிப்ஸ்

எந்த ஒரு பிராண்டிங்கையும் நம்பாதீர்கள். ஒரே ஒரு நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். அவ்வளவுதான். ஷாம்பூவை நீண்ட நேரம் தலைமுடியில் வைத்திருக்க வேண்டாம்.

எந்த ஒரு பிராண்டிங்கையும் நம்பாதீர்கள். ஒரே ஒரு நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். அவ்வளவுதான். ஷாம்பூவை நீண்ட நேரம் தலைமுடியில் வைத்திருக்க வேண்டாம்.

author-image
WebDesk
New Update
Reehana Actress

Actress Reehana skin care

திரைத்துறையில் நடிகைகள் பலர் தங்கள் அழகை பராமரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நாம் அறிவோம். ஆனால், நடிகை ரீஹானா தான் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Advertisment

"ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து பிரபல நடிகர்களை வைத்து ஒரு பொருளை விளம்பரம் செய்கிறார்கள். அதை நம்பி மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்தப் பொருளால் ஏற்படும் பாதிப்புகளை யாரும் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்," என்கிறார் ரீஹானா.

மிஸ் வொவ் தமிழா யூடியூப் சேனலுக்கு ரீஹானா அளித்த பேட்டி 

Advertisment
Advertisements

சிறு வயதில் இருந்தே நல்ல அடர்த்தியான கூந்தல் எனக்கு இருந்தது. ஆனால், சினிமா துறைக்கு வந்த பிறகு, ஹேர் கலரிங் போன்ற விஷயங்களைச் செய்து, என்னுடைய ஆரோக்கியமான கூந்தலை நானே நாசமாக்கிக் கொண்டேன். இப்போது பார்ப்பதற்கு நீளமாக இருந்தாலும், பழைய அடர்த்தி இல்லை. கூந்தல் உதிர்வு, பிளவுபடுதல் என பல பிரச்சனைகளைச் சந்தித்தேன். அதேபோல, பல பொருட்களைப் பயன்படுத்தி, சருமத்தில் பிக்மென்டேஷன், பருக்கள் என பல பிரச்சனைகள் வந்தன.

ஹேர் அண்ட் ஸ்கின் டிப்ஸ்

இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சித்ரா கண்டறிந்த சில எளிய, ஆனால் பயனுள்ள ரகசியங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஹேர் கேர்: எந்த ஒரு பிராண்டிங்கையும் நம்பாதீர்கள். ஒரே ஒரு நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். அவ்வளவுதான். ஷாம்பூவை நீண்ட நேரம் தலைமுடியில் வைத்திருக்க வேண்டாம். இயற்கையாகவே வெங்காயச்சாறை அரைத்து, எண்ணெயில் கலந்து தலைக்குத் தேய்த்து, 10-15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இதுவே போதும்.

ஸ்கின் கேர்: உங்கள் சருமத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள். சரும நிபுணரிடம் சென்று ஆலோசனை பெறுவதுதான் சிறந்த வழி. அவர்கள்தான் உங்கள் சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைப் பரிந்துரைப்பார்கள். தேங்காய் எண்ணெய், இயற்கையான மூலிகைகள் என பல பொருட்களை முயற்சி செய்து, பலன் பெறாமல் போகலாம். எனவே, நிபுணர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. மேலும், முகத்திற்கு ஐஸ் கட்டிகளைக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்வது நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் இந்த ஐஸ் க்யூப் மசாஜை தவிர்க்க வேண்டும்.
 
பி.ஆர்.பி (PRP) சிகிச்சை: ஹேர் ஃபால் பிரச்சனை இருப்பவர்கள், பி.ஆர்.பி சிகிச்சை செய்யலாம். இதில், உங்கள் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டுகளை (Platelets) தலைக்குள்ளேயே செலுத்துவதால், ஓரளவு முடி வளர வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலைத் தராது என்றாலும், ஓரளவு பலன் தரும் என்கிறார் சித்ரா.

“நான் இதுவரை ஸ்கின் அல்லது ஹேர் சம்பந்தமான எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை. இனியும் செய்ய மாட்டேன். காரணம், நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை, அது நல்லதென்று மற்றவர்களை நம்பச் செய்வது தவறு. யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நான் விரும்பவில்லை. நான் தவறு செய்து நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால், நீங்கள் அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்.

எந்தவொரு பொருளையும் நம்பி வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக, பிரபலங்கள் விளம்பரம் செய்யும் எந்தப் பொருளும் நல்லதல்ல. உங்கள் சரும வகைக்கு எது பொருந்தும் என்பதை டெர்மட்டாலஜிஸ்ட் மட்டுமே சரியாகப் பரிந்துரைக்க முடியும்," என்று ரீஹானா மீண்டும் வலியுறுத்துகிறார்

நடிகை ரீஹானாவின் இந்த வெளிப்படையான கருத்துக்கள், நமது முடி மற்றும் சருமப் பராமரிப்பில் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது. விளம்பரங்களை நம்பாமல், இயற்கையான வழிகளைப் பின்பற்றுவதும், சரியான ஆலோசனைகளைப் பெறுவதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: